பிரபல நடிகை திரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்களோடு நடித்து வந்த நடிகை திரிஷா அதனை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் கூட நடிக்க தொடங்கினார்.
இதனால் தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகை திரிஷா. அவ்வப்போது நடிகர் திரிஷாவின் மார்க்கெட் குறைவதும் அதன் பிறகு உச்சம் தொடுவதும் அதன் பிறகு குறைவதும் என மாறி மாறி நடந்து வருகிறது. இதனை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் நடிகை திரிஷாவின் மார்க்கெட் சரிந்திருந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 என்ற திரைப்படம் அவருடைய மார்க்கெட்டை அதிரி புதிரியாக எகிர வைத்தது.
ஹீரோயின் சென்ட்ரிக்கில் திரிஷா
இதன் பயனாக ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் நடிகை திரிஷா. அதன் பயனாக கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் திரிஷா சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறி இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை பாராட்டியார் என்ற கதாபாத்திரத்தை ஏற்று அழகு பதுமையாக நடித்திருந்தார் நடிகை திரிஷாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றது.
தற்பொழுது மீண்டும் நடிகர் திரிஷாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளது. எப்படி என்றால் நடிகர் விஜய்க்கு மீண்டும் ஜோடியாக நடிக்கும் அளவுக்கு நடிகர் திரிஷாவின் மார்க்கெட் உயர்ந்திருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராங்கி..
இந்நிலையில் இவர் நடிப்பில் ஏற்கனவே உருவாகி கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் பொட்டியில் தூங்கிக் கொண்டிருந்த ராங்கி என்ற திரைப்படத்தை தற்போது ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள்.
அதற்கு உண்டான பிரமோஷன் பணிகளும் சமீபத்தில் நடைபெற்றது. தற்போது தன்னுடைய மார்க்கெட் சூடு பிடித்திருக்கும் நிலையில் நடிகர் விஜய் குடியிருக்க கூடிய வீட்டின் அருகே புதிய வீடு ஒன்றை வாங்கி அங்கே செட்டிலாக இருக்கிறார் நடிகர் த்ரிஷா என கூறப்படுகிறது.
மேலும் விரைவில் தன்னுடைய நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் பொழுது புதிய வீடு கட்டி குடியேறிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் நடிகை திரிஷா என்றும் கூறுகிறார்கள்.
குளியல் தொட்டியில் நுரையுடன்..
இது ஒரு பக்கம் இருக்க அடிக்க நடிகை திரிஷா உடை எதுவும் அணியாமல் வெறும் துண்டை கட்டிக்கொண்டு குளியல் தொட்டியில் இருந்து எழுந்து வரும் புகைப்படங்கள் செல்லவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் அடக்கடவுளே என்னம்மா இது என்று ஷாக்காகிக் கிடக்கிறார்கள். நடிகை திரிஷா நடித்துள்ள ஒரு படத்தில் இருந்த எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.