சுந்தர் வேல்.. சுந்தர் C யாக மாறிய கதை.. பாலியல் வழக்கு.. நடிகை கர்ப்பம்.. பகீர் கிளப்பிய பிரபலம்…!

ஈரோடு மாவட்டத்தில் பிறந்த நடிகர் மற்றும் இயக்குனர் சுந்தர் சி ஆரம்ப காலத்தில் இயக்குனர்  மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.

இதனை அடுத்து இவர் 1995-ஆம் ஆண்டு முறைமாமன் என்ற திரைப்படத்தை எடுத்ததின் மூலம் இயக்குனராக திரை உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் அருண் விஜய் நடித்திருந்தார்.

சுந்தர் வேல் சுந்தர் சி யாக மாறிய கதை..

இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர் சி-யின் இயற்பெயர் சுந்தர வேல் என்பதாகும் இவர் தனது திரையுலகப் பிரவேசத்திற்காக இந்த பெயரை சுந்தர் சி யாக மாற்றி அமைத்துக் கொண்டதை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் இயக்குனராக ரஜினிகாந்தை வைத்து அருணாச்சல படத்தையும் உலகநாயகன் கமலஹாசனை வைத்து அன்பே சிவம் போன்ற படங்களை இயக்கிய இவர் உள்ளத்தை அள்ளித்தா படத்தை கார்த்திக்கை வைத்து இயக்கியதின் மூலம் மாபெரும் வெற்றியைப் பெற்று திரை உலகில் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டார்.

---- Advertisement ----

மேலும் முறைமாமன் திரைப்படத்தில் நடிகை குஷ்பூ நடிக்கும் போதே இவருக்கு அவர் மேல் காதல் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்புவை அண்ணி என்று அழைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

இதனை குஷ்பூ ஏற்றுக்கொண்டதை அடுத்து இவர்கள் காதல் வளர்ந்து கொண்டே சென்றது. ஒரு பக்கம் காதல் வளர்ச்சி அடைய கொண்டு வந்த வேளையில் இவர் இயக்குனராக இருந்ததோடு நின்று விடாமல் சில படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார்.

தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்த பல நடிகர்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்த சுந்தர் சி 2006 ஆம் ஆண்டு தலைநகரம் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து வீராப்பு, சண்டை போன்ற திரைப்படங்களில் நடித்த இவர் குரு சிஷ்யன், வாடா, நகரம் போன்ற படங்கள் தோல்வியை தந்ததை அடுத்து சற்று தடுமாறி பின்னர் தன்னை திரையுலகில் தக்க வைத்துக்கொண்டார்.

பாலியல் வழக்கு நடிகை கர்ப்பம்..

இந்நிலையில் இவர் காதலித்து வந்த நடிகை குஷ்பு கர்ப்பம் ஆனதை அடுத்து சுந்தர் சி உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டி இருக்கிறார். எனினும் அவர்கள் குடும்பத்தில் ஒரு நல்ல பெரிய இடத்துப் பெண்ணை அதுவும் அவர் இனத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய நெருக்கடி கொடுக்கப்பட்டதால் குஷ்புவின் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாமல்  காலம் தாழ்த்தி வந்தார்.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த குஷ்பூ அரபு நாடுகளில் இருந்த தாதாக்களால் கொடுக்கப்பட்ட பிரஷராலும் அந்த தாதா மும்பையைச் சேர்ந்த இப்ராஹிம் ஆக கூட இருக்கலாம் என்ற சந்தேகத்தை பிரபலம் கிளப்பியிருக்கிறார். 

பகீர் கிளப்பிய பிரபலம்..

மேலும் அந்தப் பிரபலம் யார் என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அவர் வேறு யாரும் இல்லை தமிழா தமிழா பாண்டியன் தான்.

இவர் பேட்டியில் பேசும் போது குஷ்பூக்காக கொடுக்கப்பட்ட கடுமையான அழுத்தத்தால் தான் சுந்தர் சி அவரை உடனே திருமணம் செய்து கொண்டார் என்ற அதிர்ச்சிகரமான தகவலை தந்திருக்கிறார்.

.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு சுந்தர வேலாகிய சுந்தர் சி எப்படி சுந்தர் சி – யாக மாறினார் என்பது குறித்தும் அவரால் கர்ப்பம் ஆக்கப்பட்டு குஷ்பூ கடைசியில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் தான் அவரை திருமணம் செய்து கொண்ட விஷயத்தைப் பற்றியும் ரசிகர்கள் பேசி அதனை பேசும் பொருளாக்கி  வருகிறார்கள்.

---- Advertisement ----