நடிகர் வடிவேலு திரையுலகில் தனது அபாரமான நகைச்சுவை திறமையால் தனி முத்திரை பதித்தவர். சமூக வலைதளங்களில் மீம்களின் நாயகன் என்று அழைக்கப்படுகிறார் நடிகர் வடிவேலு.
ஆனால் பிரபல அரசியல் கட்சி ஒன்றின் நட்சத்திர பேச்சாளராக ஒரே ஒரு தவறை செய்ததன் மூலம் தன்னுடைய சினிமா வாழ்க்கையை அஸ்தமனம் செய்து கொண்டார் நடிகர் வடிவேலு என்று கூறலாம்.
இவர் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவித்தாரோ அந்த கட்சியை கிட்டதட்ட 10 ஆண்டுகள் தமிழக அரசியலில் இருந்து மக்கள் ஒதுக்கி வைத்தனர். இந்த பத்தாண்டுகளில் நடிகர் வடிவேலு தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார்.
அப்படியே இவர் ஓரிரு படங்களில் நடித்தாலும் கூட அந்த படங்களை வெளியிடுவதற்குள் படாத பாடுபட வேண்டி இருந்தது. அரசியல் ரீதியாக எந்த அழுத்தமும் இல்லை என்றாலும் கூட இவருடைய படங்களை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முன் வரவில்லை.
இதனாலையே நடிகர் வடிவேலுவின் இருப்பு தமிழ் சினிமாவில் இல்லாமல் போனது. மறுபக்கம் இவர் நடிப்பில் வழியாக கூடிய சில திரைப்படங்களாக இருந்தாலும் ரசிகர் குடும்பத்தில் நல்ல வரவேற்பு பெற்றனர்.
வருடத்திற்கு 20 அல்லது 25 படங்களில் நடித்து வந்த நடிகர் வடிவேலு பத்து வருடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு தான் படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான நாய் சேகர் திரைப்படம் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவில்லை.
காரணம் நடிகர் வடிவேலு தன்னை அப்டேட் செய்து கொள்ளவில்லை. 10 ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்ததால் அவருடைய நகைச்சுவையை தற்போது ரசிக்க முடியவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இது ஒரு பக்கம் இருக்க எத்தனை உயர்த்திற்கு வந்தாலும் தன்னுடைய குடும்பத்தினருக்கு சிறந்த கணவராக சிறந்த தந்தையாக தன்னுடைய கடமையை செய்து வரும் நடிகர் வடிவேலுவின் மகளது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் வடிவேலுவுக்கு மொத்தம் மூன்று மகள்கள். ஒரு மகன் என 4 குழந்தைகள் இருக்கின்றனர். ஏற்கனவே இரண்டு மகள் மற்றும் ஒரு மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் கடைசி மகள் எம் பி ஏ பட்டதாரியான கலைவாணி சென்னையில் வசிக்கக்கூடிய பொறியாளர் ராமலிங்கம் என்கிற ராம்குமாருக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார்.
இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடந்தது மணமக்கள் வீட்டார் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திரையுலகையைச் சேர்ந்த பிரபலங்கள் யாருமே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் நகைச்சுவை ஜாம்பவானாக விளங்கிய நடிகர் வடிவேலுவின் மூன்றாவது மகளான கலைவாணியின் திருமணம் எந்த ஒரு திரை நட்சத்திரத்திற்கும் இல்லாமல் நடைபெற்றது. இந்நிலையில் இவருடைய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.