அம்பிகா முதல் பிரியா பவானி ஷங்கர் வரை.. ECR பண்ணை வீட்டில் விடிய விடிய கும்மாளம்.. வடிவேலுவின் வேற லெவல் டேஸ்ட்..!

தமிழ் சினிமாவில் அதிகமாக வரவேற்பை பெற்ற ஒரு காமெடி நடிகராக பல காலங்களாக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு. அதே சமயம் வடிவேலு கதாநாயகனாக நடிக்க துவங்கிய காலகட்டத்திற்கு முன்பு இருந்தே அவரைக் குறித்த கிசுகிசுக்கள் தமிழ் சினிமாவில் அதிகமாக உண்டு என்று இது குறித்து லிஸ்ட் எடுத்து கூறி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

ஆரம்பம் முதலே பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்தால் வடிவேலு என்று அவர் கூறுகிறார் நடிகர் விஜய் தனுஷ் மாதிரியான முக்கிய நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஸ்ரேயா. ஸ்ரேயாவிற்கு ஒரு கட்டத்தில் மார்க்கெட் என்பது அதிகமாக இருந்தது.

வடிவேலு கொடுத்த வாய்ப்பு:

ஆனால் போக போக மார்க்கெட் என்பது குறைய தொடங்கியது. இந்த நிலையில் வடிவேலு அவர் நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு கண்டிப்பாக ஸ்ரேயா நடனம் ஆட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.

அம்பிகா முதல் பிரியா பவானி ஷங்கர் வரை.. Ecr பண்ணை வீட்டில் விடிய விடிய கும்மாளம்.. வடிவேலுவின் வேற லெவல் டேஸ்ட்..!

இதற்காக 50 லட்சம் ரூபாயை சம்பளமாக வாங்கி கொடுத்திருக்கிறார் வடிவேலு. இந்த வாய்ப்பை வடிவேலு வாங்கி தருவதற்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொண்டதாக பேச்சுக்கள் இருக்கிறது. அதேபோல ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சதா.

அதற்குப் பிறகு ஷங்கர் இயக்கிய அந்நியன் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு சில திரைப்படங்களுக்கு பிறகு சதாவிற்கு சினிமாவில் வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது. இந்த நிலையில் எலி திரைப்படத்தில் வடிவேலு நடிக்கும் பொழுது சதாவை கதாநாயகி ஆக்க வேண்டும் என்று முடிவு செய்தாராம்.

சதாவுடன் ஏற்பட்ட பழக்கம்:

அதனை தொடர்ந்து அவர்தான் முயற்சி செய்து அந்த படத்தில் சதாவை கதாநாயகி ஆக்கியதாக கூறப்படுகிறது. இதற்காக சில வருடங்கள் சதா வடிவேலுவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கெல்லாம் முன்பு வடிவேலு சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் அவரை குறித்து ஒரு கிசுகிசு இருந்து வந்தது.

அதாவது அப்பொழுது பிரபலமாக இருந்தவர் நடிகை அம்பிகா. வடிவேலு சினிமாவிற்கு வரும்பொழுதே அவருக்கு அம்பிகா மீது அதிக ஆசை இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சில நாட்களிலேயே அம்பிகா வாய்ப்புகளை இழக்க தொடங்கினார்.

அம்பிகா முதல் பிரியா பவானி ஷங்கர் வரை.. Ecr பண்ணை வீட்டில் விடிய விடிய கும்மாளம்.. வடிவேலுவின் வேற லெவல் டேஸ்ட்..!

அந்த நிலையில் வடிவேலு அப்போது கொஞ்சம் பிரபலமாக இருந்ததால் அவரது பிரபலத்தை பயன்படுத்தி அம்பிகாவிற்கு நிறைய வாய்ப்புகளை வாங்கி கொடுத்தாராம். இதனால் வடிவேலு மீது பிரியம் கொண்ட அம்பிகா அவருக்கு ஒரு வீடு வாங்கி கொடுத்ததாகவே அப்பொழுது பேச்சுக்கள் உண்டு.

இப்படி வடிவேலு தமிழ் சினிமாவில் தொடர்பில் இருந்த நடிகைகள் லிஸ்ட்டே மிகப்பெரியதாக செல்லும் அளவிற்கு இருக்கிறது இந்த விவரங்களை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்