Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

பாலியல் தொல்லை.. உதவி செய்ய மனமில்லாதவன்.. விமர்சனங்களுக்கு வடிவேலு கொடுத்த பதில்..!

தமிழ் திரை படத்தில் நகைச்சுவை நடிகராக திகழும் வைகைப்புயல் வடிவேலு பற்றி அதிக அளவு பகிர வேண்டியது இல்லை. இவரது பாடி லாங்குவேஜ் பார்த்தாலே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து விடுவார்கள்.

அந்த அளவு தனது நடிப்புத் திறமையால் பலரையும் சிரிக்க வைக்க கூடிய அற்புதக் கலைஞர் என்றால் அது மிகையாகாது. எனினும் இவர் மீது தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகளவு வந்து உள்ளது.

நடிகர் வடிவேலு..

கேப்டன் விஜயகாந்தின் மூலம் தமிழ் திரை உலகில் நுழைந்த இவர் கேப்டன் அவரின் உதவியால் தான் என்று இந்த அளவு திரையுலகில் அந்தஸ்தை பெற்றிருக்கிறார். எனினும் நன்றி மறந்த இவர் அவரது இறப்பு சமயத்தில் நேரில் சென்று இரங்கல் செலுத்தாதது பற்றி இணையங்களில் பல்வேறு வகைகளில் செய்திகள் பரவியது.

இது போன்ற நெகட்டிவ் கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் தற்போது வைகை புயல் வடிவேலு தரமான பதிலடி தந்திருக்கிறார். அது பற்றி விரிவான விவரத்தை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகர் வடிவேலு பற்றி தாறுமாறாக விமர்சனங்கள் வெளி வந்ததை அடுத்து எந்த விதமான மறுப்பையும் தெரிவிக்காத நடிகர் வடிவேலு அண்மை பேட்டியில் சவுக்கடி கொடுக்கக் கூடிய வகையில் சில வார்த்தைகளை சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறார்.

பாலியல் தொல்லை..

அந்த வகையில் இவர் பேசும் போது சினிமாவில் நல்லதை விட கெட்டது தான் அதிகம் உள்ளது. கால் வைக்கிற இடம் எல்லாம் கண்ணி வெடியா இருக்குன்னு ஒரு வசனம் பேசி இருப்பேன் அல்லவா அது போல எது செய்தாலும் எனக்கு இப்படித்தான் பெயர் வருகிறது.

இதைப் பற்றி கமலஹாசனிடம் நான் பேசும் போது அவர் சொன்ன விஷயம் என்னை பிரமிக்க வைத்தது. ஏன் தெரியுமா? நான் பட்டதை விட கமல் பட்டது பெருசு அதைத் தான் கமலஹாசன் என்னிடம் நீ பட்டதை விட நான் பட்டதெல்லாம் பெருசுடா தம்பி என்று சொன்னார்.

விமர்சனங்களுக்கு கொடுத்த பதில்..

மேலும் இந்த விஷயத்தை மனசுல வச்சுக்க கூடாது. இந்த மாதிரி நிறைய பேச்செல்லாம் வரும். அதையெல்லாம் மனசில் போட்டுக் கொண்டு கஷ்டப்படக்கூடாது தொடர்ந்து நடுச்சுகிட்டே இருக்கணும் என்று சொன்னாரு.

இதனை அடுத்து செகண்ட் இன்னிசை நடிக்க மீண்டும் வந்ததும் என்னை விமர்சிக்க பலரும் கிளம்பினார்கள். மேலும் தொழிலை உயிராக நேசித்ததால் நாம் எப்போதும் தோற்க மாட்டோம் எங்கேயும் கீழே விழமாட்டோம்.

எனவே தான் தற்போது பகத் பாசிலோடு மாரிசன் என்ள ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். இப்படம் அருமையாக வந்துள்ளது. அந்த படத்துக்கு பெரிய அவார்ட் கிடைக்கும் அப்படிப்பட்ட கதை அது என்று வடிவேலு பேசி இருக்கிறார்.

இதனை அடுத்து செவிடன் காதில் சங்கூதியது போல எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சினிமாவில் நடிப்பதை மட்டுமே முழுமூச்சாக கொண்டு வடிவேலு செயல்பட்டு வருகிறார் என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது.

மேலும் கமலஹாசன் கொடுத்த அட்வைஸையும் அவர் ஃபாலோ செய்து வருவதால் ரீ என்றி பண்ணி இருக்கும் வடிவேலு இன்னும் பல படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைப்பார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version