&Quot;வடிவேலு பாலியல் ஜல்சா..&Quot; பொம்பள பொருக்கி.. நடிகைகளை துரத்தி துரத்தி ரூம் போட்டு.. பிரபல நடிகர் ஆதங்கம்..!

“வடிவேலு பாலியல் ஜல்சா..” பொம்பள பொருக்கி.. நடிகைகளை துரத்தி துரத்தி ரூம் போட்டு.. பிரபல நடிகர் ஆதங்கம்..!

நடிகர் வடிவேலு ஒரு நல்ல நடிகர் தன்னுடைய நகைச்சுவையான நடிப்பால் நம்முடைய கவலைகளை மறக்கச் செய்தவர் போன்ற விஷயங்களை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால், அதே சமயம் அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த அட்டூழியங்களும் மறுக்க முடியாததாக இருக்கிறது. ஏனென்றால், அவருடன் பயணித்த ஒரு நடிகர்… இரு நடிகர்.. அல்ல அனைத்து நடிகர்களுமே வடிவேலுவின் குணாதிசயம் குறித்து அவருடைய தில்லுமுல்லுகள் குறித்தும் சமீபத்தில் இணைய பக்கங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

மட்டுமில்லாமல் சக கலைஞர்களின் இறப்புக்கு கூட வந்த தலை காட்டாத வடிவேலு பற்றி ரசிகர்களும் விரக்தியில் இருக்கின்றனர். எவ்வளவு உயரத்தில் வடிவேலுவை வைத்திருந்தோம்.. ஆனால் இப்படி சில்லித்தனமாக நடந்து கொள்கிறார் என்று வடிவேலுவின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில், நடிகர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய சமீபத்திய வீடியோ ஒன்றில் வடிவேலு குறித்து ரகசியங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார். அவர் கூறியதாவது, நடிகர் வடிவேலு படங்களில் லட்சங்களில் கோடிகளில் சம்பளம் வாங்குவார்.

ஆனால் உடன் நடிக்கும் நடிகர்களுக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் என்றால் கூட மூக்கு வேர்த்துக்கொண்டு தயாரிப்பாளரிடம் முட்டுக்கட்டை போடுவார். இவர்களுக்கு எல்லாம் இரண்டாயிரம், மூன்றாயிரம் கொடுத்தால் போதும்.. இதற்கு மேல் கொடுக்காதீர்கள் என்று கூறுவார்.

தயாரிப்பாளர்களே அதிக சம்பளம் கொடுக்க முன்வரும்பொழுது வடிவேலு அதனை தடுத்து இருக்கிறார். உச்சகட்டமாக தன்னுடைய டிரைவருக்கு கொடுக்கப்படும் பேட்டா காசில் பாதியை வடிவேலு பிடுங்கி கொள்வார்.

அவ்வளவு மோசமான ஒரு பேர்வழி வடிவேலு. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் அனைவரும் தங்களுடைய ஓட்டுநர் மற்றும் மேக்கப் மேன் ஆகியோரின் குழந்தைகள் வாரிசுகளுக்கு படிப்பு செலவு அவர்களை கல்லூரியில் சேர்த்து ஒரு நல்ல வேலைக்கு அனுப்பும் வரை அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொள்வார்கள்.

ஆனால், கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் வடிவேலு தன்னுடைய ஓட்டுனரின் பேட்டா காசில் பாதியை பிடுங்கிக் கொள்கிறார் என்றால்.. எவ்வளவு மோசமான ஒரு நபராக இருப்பார் என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

இதெல்லாம் நான் நேரில் பார்த்திருக்கிறேன். மட்டுமில்லாமல் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளை துரத்தி துரத்தி ரூம் போட்டு நாசம் செய்வார். இதற்காகவே இசிஆர் இல் பண்ணை வீடு ஒன்றை வாங்கி வைத்திருக்கிறார் வடிவேலு.

சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள் வடிவேலுவிடம் சிக்கி விட்டால் கதை அவ்வளவுதான். சரியாக 6 மணிக்கு மேல் படப்பிடித்தளத்தில் இருக்க மாட்டார். நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று உடன் நடித்த நடிகையை தூக்கிக்கொண்டு அவருடைய பண்ணை வீட்டுக்கு சென்று விடுவார்.

சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நேரத்தில் சின்ன கவுண்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற பொழுது அப்பொழுது காமெடியில் உச்ச நடிகராக இருந்த கவுண்டமணி வடிவேலுவை வேண்டாம் என்று விரட்டி விட்டார்.

ஆனால் விஜயகாந்திடம் சென்று அழுது சின்ன கவுண்டர் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் வடிவேலு. மேலும் போட்டுக் கொள்வதற்கு கூட உடை இல்லை என்ற நிலையில் வடிவேலுவுடன் விஜயகாந்த் முறையிட்ட வடிவேலுவிற்கு 5 சட்டை 5 வேட்டி வாங்கி கொடுத்தார் கேப்டன் விஜயகாந்த்.

இப்படி தன்னுடைய வாழ்நாளை தொடங்கியவர் வடிவேலு. ஆனால் அவருடைய இறப்பு கூட செல்லாமல் அவர் உயிரோடு இருக்கும் பொழுது அவரை எந்த அளவுக்கு வஞ்ச வசை பாட முடியுமா வசைப்பாடி பெரும் பாவத்தை சம்பாதித்து இருக்கிறார் வடிவேலு.

செய்நன்றி மறப்பது என்பது தனக்கு உதவி செய்தவரை கொள்வதற்கு சமமானது. அதனை வடிவேலு செய்திருக்கிறார். இதனால் தான் பொதுமக்கள் ரசிகர்கள் அவர் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.

வடிவேலு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த பாவத்தை கழுவ முடியாது என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.