நான் வாயை தொறந்த வடிவேலுவின் மிச்ச மானமும் போயிடும்.. சாட்டை சுழற்றிய சீரியல் நடிகை..

நான் வாயை தொறந்தா வடிவேலுவின் மிச்ச மானமும் போயிடும்.. சாட்டை சுழற்றிய சீரியல் நடிகை..

நடிகர் வடிவேலு காமெடி காட்சிகளில் நடித்ததால்தான் பல நடிகர்களுக்கு, நடிகைகளுக்கு அடையாளம் கிடைத்தது என்பதை மறுக்க முடியாது. ஒரு கட்டத்தில் அவரது காமெடி சீனில் நடிப்பவர்கள் பெயர் தெரியாவிட்டாலும், அந்த காமெடியில் நடித்தவர் என்ற அடையாளம் அந்த துணை நடிகருக்கு கிடைக்கும்.

மருதமலை படத்தில், அர்ஜூன் ஹீரோவாக நடித்திருப்பார். இந்த படத்தில் போலீஸ் ஹெட்கான்ஸ்டபிள் ஆக ஏட்டு ஏகாம்பரம், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏகாம்பரம் என்ற கேரக்டரில் போலீஸ்காரராக வடிவேலு நடித்திருப்பார்.

பிரியங்கா

இந்த படத்தில் ஒரு காட்சியில், ஒரு பெண் திருமணம் செய்துக்கொள்ள ஸ்டேஷனுக்குள் ஒருவரோடு மாலையும் கழுத்துமாக வருவார். அப்போது அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வடிவேலு முயற்சிக்கும் போது மாட்டு ரவி, சாரை பாம்பு என 4 பேர் அந்த பெண்ணின் கணவர் என்று வருவார்கள்.

இந்த காட்சியில் நடித்தவர்தான் நடிகை பிரியங்கா. பல படங்களில் வடிவேலுவுடன் பிரியங்கா நடித்திருக்கிறார். வடிவேலு பஸ்சில் பயணிக்கும் போது, அந்த பஸ் கண்டக்டர் மீசை ராஜேந்திரன் மனைவியாக, பஸ்சில் பிரியங்கா பயணிப்பார்.

நான் வாயை தொறந்தா வடிவேலுவின் மிச்ச மானமும் போயிடும்.. சாட்டை சுழற்றிய சீரியல் நடிகை..

அசதிக்கு கை போட்டுக்கலாம்

அப்போது, அருகில் உட்கார்ந்துக்கொள்ளும் வடிவேலு, வசதிக்கும் இல்லேன்னாலும், அசதிக்கு கை போட்டுக்கலாம் என்று அவர் தோள் மீது கை வைக்க, மீசை ராஜேந்திரன் வடிவேலுவை அரிவாளால் வெட்ட முயற்சிப்பார். இப்படி பல படங்களில் பிரியங்கா வடிவேலுடன் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: கமல் அப்படி பண்ணுவாருன்னு நெனைக்கல.. அஜித் மட்டும் தான் அதை செஞ்சாரு.. நடிகை கிரண் காரசாரம்..!

சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி நடிகரான அறிமுகமான வடிவேலு, பெரிய நடிகராக வளர்ந்த பின், தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமானவர்களையே அலட்சியப்படுத்த ஆரம்பித்தார்.

நான் வாயை தொறந்தா வடிவேலுவின் மிச்ச மானமும் போயிடும்.. சாட்டை சுழற்றிய சீரியல் நடிகை..

ஷங்கரிடம் தகராறு

பலரை, பொது இடங்களில் காரசாரமாக விமர்சித்தார். விஜயகாந்த், ராஜ்கிரண் போன்றவர்களை கண்டாலே முகம் சுளித்தார். இயக்குநர் ஷங்கரிடம் தகராறு செய்தார். அவர்தான் காதலன் போன்ற படங்களில் வடிவேலுவுக்கு நடிக்க வாய்ப்பளித்தவர்.

இதனால் சினிமாவை விட்டே 10 ஆண்டுகளுக்கு மேலாக நிராகரிக்கப்பட்ட வடிவேலு, மீண்டும் நடிக்க வந்து அப்படியே சில படங்களில் நடிக்கவும் செய்கிறார். ஆனால் முன்பிருந்த இமேஜ், வரவேற்பு இப்போது ரசிகர்களிடம் வடிவேலுவுக்கு இல்லை என்பதே உண்மை.

தங்களுக்கு செய்த அநியாயங்களை…

அவருடன் காமெடி காட்சிகளில் நடித்த துணை நடிகர்கள் பலரும், வடிவேலு தங்களுக்கு செய்த அநியாயங்களை பட்டியலிட்டு கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் நடிகை பிரியங்கா கூறியதாவது, நடிகர் வடிவேலு நடிப்பு வராத பலருக்கும் தன்னுடன் காமெடி காட்சிகளில் நடிக்க வைத்து வாய்ப்பு வாங்கி கொடுத்தவர். அவரால்தான் நான் ஒரு நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானேன்.

நான் வாயை தொறந்தா வடிவேலுவின் மிச்ச மானமும் போயிடும்.. சாட்டை சுழற்றிய சீரியல் நடிகை..

கொஞ்ச நஞ்ச மானம் மரியாதையும்…

வடிவேலுவை பற்றி கண்டபடி பேசி அவரது உண்மையான முகத்தைஉடைத்து வருகின்றனர். ஒரு சிலரோ, நான் வாய் திறந்தா வடிவேலுவோட கொஞ்ச நஞ்ச மானம் மரியாதையும் போயிடும் என்று பேசி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: என்னது பாடகர் மனோவின் மனைவி இந்த பிரபலமா..? தீயாய் பரவும் போட்டோ..

ஆனால் நான் வடிவேலுவால் நல்ல நிலைமைக்கு வந்தேன். அவரால்தான் எனக்கு இந்த பெயரும் புகழும் கிடைத்தது என பிரியங்கா அந்த நேர்காணலில் பேசியிருப்பது, சினிமா ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான் வாயை தொறந்தா வடிவேலுவின் மிச்ச மானமும் போயிடும்.. சாட்டை சுழற்றிய சீரியல் நடிகை..

கணவரை விவாகரத்து செய்ய முடிவு

கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகி, குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரியங்கா, இப்போது கணவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும், அம்மாவுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க வேண்டியிருப்பதால், மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருப்பதாகவும் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

நான் வாயை தொறந்தா வடிவேலுவின் மிச்ச மானமும் போயிடும் என்று சாட்டை சுழற்றிய சீரியல் நடிகைகளுக்கு மத்தியில் பிரியங்கா மட்டுமே, வடிவேலு நல்ல மனிதர் என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறார்.