Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

சார்.. உங்களுக்கு பேத்தி மாதிரி அந்த பொண்ணு..! – வைரமுத்து-வை விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கைக்கு பின்னால் தனக்கு என்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்திருக்கும் கவிஞர் வைரமுத்து [Vairamuthu] பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

மிக அற்புதமான எழுத்தாளர் மட்டுமல்லாமல் பாடல் ஆசிரியராக திகழக்கூடிய இவர் நிழல்கள் என்னும் திரைப்படத்தில் இது ஒரு பொன் மாலை பொழுது என்ற பாடலை எழுதி பிரபலமானவர். இதனை அடுத்து பல திரைப்படங்களுக்கு அற்புதமான வரிகள் தந்து உயிரோட்டமான பாடல் வரிகளால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார்.

Vairamuthu
Vairamuthu

இதுவரை திரைப்படங்களில் சுமார் 7000 பாடல்களுக்கும் மேல் எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கக்கூடிய இவரின் மீது பின்னணி பாடகியான சின்மயி பாலியல் குற்றச்சாட்டுக்கள் கூறிய பிறகு இவரது பெயர் டேமேஜ் ஆனது. அதற்கு முன்பு வரை புகழின் உச்சத்தில் இருந்த இவரை கவிப்பேரரசு என்று அனைவரும் அன்போடு அழைத்தார்கள்.

இதனை அடுத்து பல பெண்கள் இவர் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியதை அடுத்து இவர் மேல் இருந்த மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கியது என்று கூறலாம். இந்நிலையில் இவர் மீண்டும் ஒரு சர்ச்சை மீது கருத்துக்களை கூறி அனைவரது வயிற்றெரிச்சலையும் வாரி கொட்டி இருக்கிறார்.

அது என்னவெனில் தற்போது பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த திண்டுக்கலை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை வைரமுத்து பாராட்டி ட்விட் செய்த விஷயம் தான் பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Vairamuthu
Vairamuthu

அந்த ட்விட் பதிவில் அவர் ஒரு தச்சு தொழிலாளியின் மகள் மாநில தேர்வில் உச்சம் தொட்டு இருப்பது பெண் குழந்தைக்கு பெருமை சொல்கிறது.

எப்படி பாராட்டுவது அண்மையில் நான் பெற்ற தங்க பேனாவை தங்கை நந்தினிக்கு பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன் உன் கனவு மெய்ப்பட வேண்டும் பெண்ணே என பாராட்டி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த பதிவை பார்த்து படித்த நெட்டின்சன்கள் மகள் வயது இருக்கும் பேத்தியை தங்கை என்று கூறுவதா? என்று கேட்டு பங்கமாக விளாசி தள்ளி இருக்கிறார்கள்.

Vairamuthu
Vairamuthu

மேலும் வைரமுத்துவிற்கு என்ன ஆகிவிட்டது என்று கேட்கத் தோன்ற கூடிய அளவிற்கு ஒவ்வொருவரும் இதை மிகைப்படுத்தி வைரமுத்துவின் மீது பாய்ந்திருப்பது பலரது மத்தியிலும் பேசும் பொருள் ஆகிவிட்டது.

உண்மையிலேயே விஷயம் புரிந்த வைரமுத்து இது போன்ற தவறுகளை எதனால் செய்து வருகிறார் அல்லது இவர் தெரிந்தே தனது பெயர் மீடியாக்களில் அதிகளவு உச்சரிக்கப்பட வேண்டும் என்பதற்காக எப்படி செய்து இருக்கிறாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி விட்டது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version