Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

பேத்தி வயசு பெண்ணை.. இப்படி அழைக்க நா கூசவில்லையா..? – வைரமுத்து-வை கலாய்க்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் வலம் வரும் சிறந்த கவிஞர்களில் மிக முக்கியமானவர் வைரமுத்து. கவிப்பேரரசு (Vairamuthu) என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர். சிறந்த பாடல் ஆசிரியராக ஆறுமுறை தேசிய விருது பெற்ற கவிஞர்.

சினிமாவில், இவர் எழுதிய பாடல்கள் பல ஆயிரம். அதுமட்டுமின்றி கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர், வைகரை மேகங்கள், மீண்டும் என் தொட்டிலுக்கு, வில்லோடு வா நிலவே என நூல்களை எழுதியவர். இதில் சில நூல்கள் கவிதை வடிவிலும், சில நூல்கள் உரைநடை வடிவிலும் இருக்கின்றன.

வைரமுத்து
Vairamuthu

நிழல்கள் படத்தில், இது ஒரு பொன்மாலை பொழுது பாடல் மூலம், தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து – ஏஆர் ரகுமான், மணிரத்னம், வைரமுத்து – என, இந்த இரண்டு மெகா கூட்டணியிலும், வைரமுத்து படைத்த சரித்திர பாடல்கள் ஏராளம், ஏராளம்.

கடந்த 1980-90 களில், வைரமுத்துவும், வாலியும் போட்டி போட்டு எழுதி எழுதி தள்ளிய பாடல்கள் தான் இன்றும், இன்னும் ரசிக்கும் மிகச்சிறந்த பாடல்களாக, நம் செவிகளில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. எம்ஜிஆருக்கு கண்ணதாசன், வாலி எழுதிய பாடல்களால் புகழ் கூடியது என்றால். ரஜினி, கமல் என்ற இரண்டு தமிழ் சினிமா நாயகர்களுக்கு வைரமுத்து எழுதிய பாடல்கள்தான், அவர்களது புகழை மேலும் பலமடங்கு உயர்த்தித் தந்தது.

வைரமுத்து
Nanthini

பாடல்கள் எழுதுவது, நல்ல படைப்புகளை எழுதுவது மட்டுமின்றி பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு பேசுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் வைரமுத்து. இவரது மேடைப் பேச்சுகளில் கவிதை மணக்கும், சொல்லாடல் வசீகரிக்கும், தன்னம்பிக்கை கொப்பளிக்கும்.

மணிக்கணக்கில் கேட்டாலும் சளைக்காத பேச்சாற்றலுக்கு சொந்தக்காரர் வைரமுத்து என்றால் அது மிகையல்ல.ஆனால், மீ டூ விவகாரத்தில், பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறிய சில சர்ச்சையான கருத்துகளால், வைரமுத்து மிகவும் மனம் சோர்ந்தார்.

பலதரப்பு விமர்சனங்களுக்கும் ஆளானார். அதன்பிறகு, தனது வழக்கமான பாணியில் இரு;ந்து சற்று விலகி இருக்க துவங்கிய வைரமுத்து, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை குறைத்துக்கொண்டார். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பாடல்களை எழுதுகிறார்.

வைரமுத்து
Vairamuthu

எனினும் இன்னும் அவரது படைப்புகளில் இன்னும் வீரியம் குறையவில்லை. கவிதை வரிகளில் பழைய படைப்பாற்றலும், சினிமா பாட்டுகளில் அதே வேகமும் வெளிப்படவே செய்கிறது. மேலும், வைரமுத்து, கருணாநிதியின் ஆதரவாளராக, திமுக விசுவாசியாக தன்னை வெளிப்படுத்திக்கொள்வதும் அவர் மீதான அபிமானத்தை குறைக்க செய்கிறது. கட்சி சார்பாளராக அவரை பார்க்கும் பலரும், சிறந்த கவிஞர், எழுத்தாளர் என்பதை வெகு எளிதாக புறந்தள்ளி விடுகின்றனர்.

எப்போதும், சிறந்த திறமையாளர்களை, ஆற்றல் மிக்கவர்களை, போட்டியில் வென்றவர்களை ஊக்குவித்து, பாராட்டி பரிசளிப்பதில் மிகுந்த விருப்பம் கொண்டவர் வைரமுத்து. அந்த வகையில், தற்போது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினி, ஆறு பாடங்களிலும், 100 மதிப்பெண் என, 600 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அம்மாணவியை, பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வைரமுத்து
Vairamuthu

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து அந்த மாணவியை பாராட்டி, தங்கப் பேனாவை பரிசளிக்க முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவரே டிவீட் செய்திருக்கிறார்.அதில், தச்சுத் தொழிலாளியின் மகள், மாநில தேர்வில் உச்சம் தொட்டிருப்பது பெருமையளிக்கிறது. சமீபத்தில் எனக்கு பரிசளித்த தங்கப்பேனாவை, மாணவி நந்தினிக்கு பரிசளிக்கிறேன். தங்கப் பேனாவை நேரில் பரிசளிக்க திண்டுக்கல்லுக்கு நேரில் வருகிறேன். கனவுகள் மெய்ப்பட வேண்டும் பெண்ணே, என வாழ்த்துகள் சொல்லி இருக்கிறார்.

அன்பின் மிகுதியாக, பிறர் தனக்கு பரிசாக தந்த தங்கப் பேனாவை, மாநில அளவில் பிளஸ் 2 தேர்வில், முதலிடம் பெற்ற மாணவி நந்தினிக்கு நேரில் பரிசளிக்க, வைரமுத்து திண்டுக்கல் வருவதாக கூறியிருப்பது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதே நேரம், பேத்தி வயசுல இருக்கும் பெண்ணை தங்கை என கூறுவதற்கு உங்களுக்கு நா கூசவில்லையா..? என்ற கலாய் மீம்களையும் பார்க்க முடிகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version