வெள்ளித்திரை கதாநாயகிகளுக்கு போட்டியாக சின்னத்திரையில் நாளுக்கு நாள் புது புது நடிகைகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றனர். என்னதான் புதுசு புதுசாக நடிகைகள் அதிகமானாலும் ஆரம்ப காலத்திலிருந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக் கூடிய நடிகைகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் வருகிறார்கள்.
அந்த வகையில் ரசிகர்கள் பார்த்ததும் அடையாளம் கண்டு கொள்ளும் ஒரு நடிகை வந்தனா மைக்கேல். சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைத்திருக்கும் வந்தனா மைக்கேல் ஆனந்தம் என்ற சீரியலில் டெல்லி கணேசனின் மகளாக அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
முதல் சீரியலிலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்த சுட்டி பெண்ணாக வலம் வந்தவர் நடிகை வந்தனா மைக்கேல். ஆனால், அதற்குப் பிறகு தனது திறமையை நிறுவுவதற்கு பாசிட்டிவ் இல்லாமல்.. நெகட்டிவ் கேரக்டரில் தான் இவருக்கு அதிக வாய்ப்பு கொடுத்தது.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய உயரத்திற்கும் வாட்டசாட்டமான தோற்றத்திற்கும் வில்லத்தனமான கதாபாத்திரங்கள் அப்படியே அம்சமாக பொருந்தி வருகிறது என்பதால் தொடர்ந்து வில்லியாக நடித்து வருகிறார் நடிகை வந்தனா மைக்கேல்.
என்னதான் சீரியலில் வில்லியாக மிரட்டினாலும் இணைய பக்கங்களில் தன்னுடைய காந்த கண் அழகால் ரசிகர்களை கவர்ந்து கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார். அம்மணியின் அழகை பார்க்கும் ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் நலனும் நந்தினியும் என்ற படத்தில் நடித்த மைக்கேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட தற்போது தன்னுடைய காதலனோடு சந்தோஷமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு வில்லத்தனத்தில் மட்டுமில்லாமல் வீட்டு விலங்குகளில் வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் இருக்கிறதாம்.. பள்ளி கல்லூரிகளில் படிக்கும் போது கூட தெருவில் நாய்களுக்கு ஏதாவது அடிபட்டாலும் அவற்றின் உடல் சோர்வாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது மருத்துவமனைக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார் நடிகை வந்தனா மைக்கேல்.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றது.