பிரபல குணச்சித்திர நடிகரான விஜயகுமாரின் மகளாகிய வனிதா ஆரம்ப காலகட்டத்தில் திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். மேலும் இவர் தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த திரைப்படத்தின் மூலம் தமிழக மக்களின் மத்தியில் பேமஸான நபராக மாறினார்.
அடுத்து திரைப்பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த சீசனில் இவர் பலர் மத்தியில் சண்டைகளை உண்டாக்கி அதன் மூலம் மகிழ்ச்சியை அடைவதில் கில்லாடியாக இருந்தார்.
இதனை அடுத்து இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. மேலும் இவர் 2020 ஆம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டு தமிழகம் முழுவதுமே ஒரு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.
மேலும் தமிழகப் பெண்கள் இதுபோல நடந்ததே இல்லை. இரண்டு மூன்று முறை திருமணம் செய்து கொண்டு வாழ்வது முறைதானா என்பது போன்ற பல சர்ச்சைகளை இவரது திருமணம் கிளப்பிவிட்டது. அது மட்டுமல்லாமல் இவர் திருமணம் செய்து கொண்ட நபருக்கு இருக்கும் முதல் மனைவியும் இவரின் மேல் பலவிதமான புகார்களை அடுக்கடுக்காக தெரிவித்து வந்தார்.
இதையெல்லாம் சற்றும் தனது காதில் வாங்கிக் கொள்ளாமல் திருமணம் முடிந்த கையோடு இவர்கள் அனைவரும் கோவா சென்று வந்த பிறகு பீட்டர் பாலுக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேற்றுமை காரணமாக பீட்டர் பால் தன்னை விட்டு விட்டு சென்றதாக தகவல்களை கூறினார்.
இந்த நிலையில் பீட்டர் பால் இறந்து விட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த செய்தி அதிகாரப்பூர்வமானதா என்பதும் தெரியாத வேலையில் இவர் தனது மகளுடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க திரையரங்குக்கு சென்று இருக்கிறார்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு தனது எக்ஸ் ஹஸ்பண்டின் இறப்புக்கு கூடி செல்லாமல் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க ஜாலியாக சென்று இருப்பது முறைதானா என்று ரசிகர்கள் பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பி இவரை கிண்டலடித்து வருகிறார்கள்.
இந்தக் கேள்விக்கான பதிலை விரைவில் இவர் தருவார் என்ற எதிர்பார்ப்பில் காட்டிருக்கும் ரசிகர்களுக்கு இவர் அளிக்கக்கூடிய பதில் எப்படி இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து தெரிந்து கொள்ளலாம்.