Tuesday, September 24

செருப்ப கழட்டி அடிக்கணும்.. மணிமேகலையை கிழித்து தொங்க விட்ட வாயாடி வனிதா..

குக் வித் கோமாளி சீசன் 5 மணிமேகலை விஜேவாக பணிபுரிந்ததை அடுத்து அதில் விஜே பிரியங்கா போட்டியாளராக கலந்து கொண்டு இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விஜே பிரியங்காவின் டாமினேஷன் தாங்காமல் அந்த ஷோவை விட்டு வெளியேறினார் மணிமேகலை.

இந்நிலையில் போட்டியாளராக பங்கேற்ற பிரியங்கா எப்படி மணிமேகலையின் மீது இப்படி டாமினேஷன் செய்து அவரை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாமல் வெளியேற்றினார் என்பது குறித்து இணையங்களில் பரபரப்பாக செய்திகள் வெளி வந்தது.

செருப்ப கழட்டி அடிக்கணும்..

இந்நிலையில் மணிமேகலைக்கு ஆதரவாக பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக சிலரும் தங்களது கருத்துக்களை சொல்லி வரக்கூடிய வகையில் பிரியங்காவால் பல விஜேக்கள் விஜய் டிவியை விட்டு வெளியே சென்ற விஷயங்கள் வெளியுலகுக்கு அம்பலமானது.

இதனை அடுத்து தன்மான தமிழச்சியாக சித்தரிக்கப்பட்ட மணிமேகலை வருமானத்தை விட தன்மானம் பெரிது என்று கூறியது பலர் மத்தியிலும் கவனத்தை பெற்றது. இந்நிலையில் இதுவரை வாய் திறக்காமல் மௌனமாக இருந்த வாயாடி அக்கா வனிதா இந்த நிகழ்வு குறித்து அண்மையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசி இருக்கிறார்.

இந்த பேச்சின் போது மணிமேகலை மற்றும் பிரியங்காவை பற்றி அவருக்கு மிக நன்றாக தெரியும் என்றும் பிரியங்கா விடம் அதிகளவு பழக்கவழக்கம் உள்ளதாகவும் கூறியிருக்கிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் தன்மான முக்கியம் அது எதிர்வரும் தலைமுறைக்கும் தேவை என்று பேசினார்.

மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் டிஸ்கஷன் போவது இயல்பான ஒன்று தான் சினிமாக்களில் கூட அப்படி இருக்கும் போது ஒவ்வொருவரும் சொல்லுவதை கேட்டு தான் அனைவரும் கலந்து ஆலோசித்து செய்வார்கள். அதை எப்படி தவறு என்று நாம் சொல்ல முடியும் அப்படி சொன்னால் அது அவருடைய மெச்சூரிட்டி அடையாத தன்மையை காட்டுகிறது.

ஒருவரை ஒப்பிட்டு பேசி அவர்கள் மனம் புண்படும்படி பண்ணினால் அது மிகவும் தவறு எனினும் அந்த நிகழ்ச்சியில் நான் தான் பேச வேண்டும் நீங்கள் பேசக்கூடாது என்று சொல்லுவது உண்மைகள் தவறான ஒன்றாகும்.

இந்த குக் வித் கோமாளி செட்டுக்கு நானும் கூட சென்றிருந்தேன். அங்கு இருக்கும் அனைவரையும் எனக்கு மிக நன்றாக தெரியும். இந்த விஷயத்தை பொறுத்த வரை மீடியாக்கள்தான் ஊதி பெரிதாக்கிவிட்டது.

மணிமேகலையை கிழித்து தொங்க விட்ட வாயாடி வனிதா..

இந்த விஷயத்தில் எனக்கு பிடிக்காத ஒன்று என்னவென்றால் மணிமேகலை தன் கணவரோடும் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறார்கள். இதனால் அவருக்கு தன்மானம் உள்ளது என்று சொல்லுவது மிகவும் தவறு.

பிரியங்காவை அவர் கணவர் விட்டு சென்று விட்டதால் அவருக்கு செல்ப் ரெஸ்பெக்ட் கிடையாது என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம். எந்த காலத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். இப்படிப் பேசுபவர்களை செருப்பை அல்ல வேறு எதைக் கொண்டு வேண்டுமானாலும் அடிக்கலாம் என்று கோபமாக குமுறினார்.

பிரியங்காவின் அந்த டாமினேஷன் கேரக்டர் தான் அவரது கணவர் அவரை விட்டு சென்று விட்டார் என்று மீடியாக்கள் பல்வேறு வகையில் பேசி வருவது மிகவும் தவறு. இவர் கணவர் அவரை விட்டு ஓடவில்லை அவர்கள் பிரிந்து விட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் எந்த காலத்தில் இருக்கிறீர்கள் என்று கணவன் விட்டு விட்டு போகிறார் என்று சொல்வது போல மனைவியும் விட்டுச் செல்கிறார். எந்த காலத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் பதிவு செய்தார்.

எனவே அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு அவருடைய கேரக்டருக்கோ சம்பந்தம் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மேலும் மணிமேகலையை நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் பிரியங்காவை பற்றி பல்வேறு வகையான நம்ப முடியாத வேண்டாத விஷயங்கள் வெளி வரும் போது அதை ஆதரிப்பது போல் இருப்பது தவறு என சொல்லிக் கொள்கிறேன்.

மேலும் நான் அவருக்கு பர்சனலாக போன் செய்து சொல்லவில்லை. அவர்களும் மீடியா வழியாகத் தான் எல்லாவற்றையும் பகிர்ந்து இருக்கிறார்கள். எனவே இங்கிருந்து சொல்வது தான் மணி நீ வளர்ந்து வரக்கூடிய பொண்ணு. உனக்கு நல்ல கணவர் இருக்கிறார் உன்னுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கிறது.

உன் கண் எதிரிலேயே மற்றொருவருடைய கேரக்டரை மோசமாக பேசும் போது அதை நீ என்கரேஜ் செய்யக்கூடாது. சொம்பெல்லாம் தூக்கி அடிப்பது போல் இருக்கும் வீடியோவை பார்வேர்ட் செய்தார்கள். பார்ப்பதற்கு இது நன்றாக இல்லை இனி வேண்டாம் என மென்மையாக பேசுவது போல் மணிமேகலையை தார் தாராக கிழித்து விட்டார் வாயாடி வனிதா அக்கா.