Tuesday, September 24

இவங்கள செருப்ப கழட்டி அடிக்கணும்.. வனிதா செம்ம கிழி..!

பொதுவாக விஜய் டிவியில் எப்போதும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இருந்து வந்தது. எப்போதும் சண்டைக்கு பஞ்சம் இல்லாத நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கும்.

அதே சமயம் எப்பொழுதும் காமெடிக்கு பஞ்சம் இல்லாத ஒரு நிகழ்ச்சியாக தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கும். ஆனால் சமீபகாலமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. விஜய் டிவியில் இருக்கும் அரசியல்தான் இதற்கு காரணம் என்று மக்கள் ஒரு பக்கம் கூறி வருகின்றனர்.

குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை வெளியிட்ட வீடியோதான் இது அனைத்திற்கும் காரணமாக அமைந்திருக்கிறது. மணிமேகலை வெளியிட்ட அந்த வீடியோவில் குக் வித் கோமாளி சீசன் 5 இல் வி.ஜே பிரியங்கா தனக்கு தொல்லை கொடுத்து வந்ததை அடுத்து அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருப்பதாக கூறினார்.

செருப்ப கழட்டி அடிக்கணும்..

அதிலிருந்து இந்த சர்ச்சை ஆரம்பமாக துவங்கியது. இந்த நிலையில் ஏற்கனவே பலரிடமும் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது ஆனால் யாரும் வெளிப்படையான ஒரு கருத்தை கூறவில்லை. மேலும் யார் பக்கம் தவறு என்பதையும் பெரிதாக யாரும் கூறவில்லை. ஆனால் பெரும்பான்மையான பிரபலங்கள் கூறும் பொழுது இது மணிமேகலைக்கும் வி.ஜே பிரியங்காவிற்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்சனை.

இதை பெரிய பிரச்சனையாக ஆக்க வேண்டாம் என்று கூறிவிட்டனர். இந்த நிலையில் குக் வித் கோமாளியில் டைட்டில் வின்னர் ஆக முன்பு இருந்தவர் வனிதா விஜயகுமார். பொதுவாகவே வனிதா விஜயகுமார் சர்ச்சையாக தான் பேசக்கூடியவர் என்பது அனைவருமே அறிந்த விஷயம்.

வனிதா செம்ம கிழி

இந்த நிலையில் வனிதா விஜயகுமாரிடம் இந்த வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்பொழுது அது குறித்து பேசிய வனிதா விஜயகுமார் கூறும் பொழுது எப்போதுமே குக் வித் கோமாளி மிக ஜாலியாக தான் சென்று கொண்டிருக்கும்.

சில நேரங்களில் யாராவது நகைச்சுவைக்காக பேசுவது அங்கு பிரச்சனையாகிவிடும். ஆனால் என்னை பொருத்தவரை மணிமேகலை பக்கம்தான் தவறு என்று கூறுவேன். ஒரு திரைப்படத்தை எடுத்துக் கொண்டாலும் அதை இயக்குனர் மட்டும்தான் இயக்க வேண்டும் மற்றவர்கள் இயக்கக் கூடாது என்று கூறுவது மெச்சூரிட்டி இல்லாத தன்மையாகும்.

வைரலான வீடியோ

அதை தான் குக் வித் கோமாளியில் மணிமேகலையும் செய்திருக்கிறார் இப்பொழுது மணிமேகலைக்கும் விஜே பிரியங்காவிற்கும் ஆதரவாகவும் எதிராகவும் பேசி வருகின்றனர். ஆனால் அதில் சிலர் பேசும்பொழுது மணிமேகலை திருமணம் ஆனவர் என்பதால் அவருக்கு ஆதரவாகவும் பிரியங்கா விவாகரத்து வாங்கியவர்கள் என்பதால் அவருக்கு எதிராகவும் பேசுவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது அப்படி பேசுபவர்களை செருப்பை கொண்டே அடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.

Exit mobile version