பீஸ்ட் பட தோல்வியிலிருந்து வெளி வந்து நிச்சியம் ஒரு சரித்திரம் பேசும் படத்தை கொடுப்பார் என்று நினைத்த விஜய் ரசிகர்கள் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தை பார்ப்பதற்காக பெருமளவு கூடி இருந்தார்கள்.
வெறித்தனமாக ரசிகர்கள் அனைவரும் விஜய் அண்ணன் படத்தை பார்ப்பதற்காக காத்திருந்தாலும் வாரிசு படம் அவர்களுக்கு முழு திருப்தியை தந்ததா? என்றால் ஏதோ ஒன்றை இதில் அண்ணன் மிஸ் செய்து விட்டார் என்று தான் கூறியிருக்கிறார்கள்.
மாபெரும் எதிர்பார்ப்புக்கும், சர்ச்சைகளுக்கும் மத்தியில் அஜித் படத்தோடு போட்டி என்ற நிலையில் வெளிவந்த பொங்கல் விருந்தான விஜய் படமான வாரிசு ஆக்சன், சென்டிமென்ட் ,நகைச்சுவை என்று அனைத்தையும் கலந்து ஒரு சரிவிகிதத்தில் கொடுத்து இருந்தாலும் இது விஜய் படமே இல்லை என்று ரசிகர்கள் அனைவரும் முத்திரை குத்தும் வண்ணம் அமைந்துவிட்டது.
மேலும் கடந்தாண்டு வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் எந்த அளவுக்கு ஏமாற்றத்தை ரசிகர்கள் மத்தியில் தந்ததோ அதைத்தான் இந்த வாரிசு திரைப்படமும் செய்து விட்டதா என்ற கேள்வியை அனைவரது மத்தியிலும் கிளப்பிவிட்டிருக்கிறது.
இதனை அடுத்து பொருத்து இருந்து பார்ப்போம் முதல் நாளிலேயே எதையும் கணித்து விட முடியாது வரும் நாட்களில் ரசிகர்கள் மத்தியில் வாரிசு படம் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பதை இனிவரும் நாட்களில் தான் தெரியவரும் என்பது போன்ற கருத்து கணிப்பை தற்போது முன் வைத்திருக்கிறார்கள்.
எனினும் ஏகப்பட்ட ஆவலில் காத்திருந்த ரசிகர்கள் அனைவரும் முதல் நாள் முதல் காட்சி அந்த அளவு திருப்தியை தரவில்லை என்பதைத்தான் பதிவு செய்து வருகிறார்கள்.
மேலும் இந்தக் கதையானது இரண்டு முன்னணி நடிகர்கள் நடிக்க வேண்டாம் என்று தூக்கி எறிந்த கதையில் தான் விஜய் நடித்திருக்கிறார் என்ற செய்திகள் அரசல் புரசலாக வெளி வந்துள்ளது.
இதனை அடுத்து தான் இந்த கதையை தளபதி விஜய்யிடம் இயக்குனர் வம்சி கூறி இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்தப் படம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.