நடிகை குஷ்பூ சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்று இந்த படத்திற்கு தலைப்பு கொடுக்கலாம் அந்த அளவுக்கு இந்த படத்தில் குடும்பம் சம்பந்தமான பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கிறது.
இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை குஷ்பு நடித்திருந்தார். ஆனால் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே முற்றாக நீக்கப்பட்டு இருக்கிறது. வாரிசு திரைப்படத்தை ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது என்றாலும் கூட நடிகர் அஜித்தின் துணிவு படத்தோடு மோதிதன் காரணமாக வாரிசு திரைப்படத்திற்கு பயங்கரமான அடி என்று கூறலாம்.
துணிவு படத்தை காட்டிலும் வாரிசு படத்தின் முதல் நாள் கலெக்சன் குறைந்த அளவில்தான் வந்திருக்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் படத்தில் நடித்திருந்த நடிகை குஷ்புவின் காட்சிகள் எங்கே..? என்ற கேள்விதான் ரசிகர்கள் மத்தியில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.
எதற்காக குஷ்புவின் காட்சிகள் நீக்கப்பட்டது.. குஷ்பூ படத்தில் என்னவாக நடித்திருந்தார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில் இதற்கு உண்டான பதில் தற்போது கிடைத்திருக்கிறது.
இந்த கேள்வியை நடிகர் குஷ்புவிடமே கேட்டோம். அவர் கூறியதாவ, இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதை விளக்கமாக சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். கடந்த வருடத்தில் வாரிசு படப்பிடிப்பு படப்பிடிப்பு தளத்திலிருந்து குஷ்பூ ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
அந்த புகைப்படத்தில் நடிகை குஷ்பூ ராஷ்மிகா மற்றும் விஜய் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலானது. சமீபத்தில் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசியிருந்தார்.
வாரிசு படத்தின் விழா மேடையில் குஷ்பு குறித்த சில அழகான நினைவுகளை நடிகர் விஜய் பகிர்ந்து கொண்டார். அப்போது இந்த படத்தில் நடிகை குஷ்பூ முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று கூறினார்.
ஆனால், குஷ்புவின் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெறவே இல்லை. படத்தின் ரன் டைம் அதிகமாக இருக்கிறது. என்பதாலேயே நடிகை குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறது என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்.
இதனால் நடிகை குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை வெட்டி வீசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு வேலை இந்த படத்தில் நடித்த நடிகர் பிரபுவிற்கு மனைவியாக நடித்திருப்பார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
இதில் இன்னும் ஒரு கூத்து என்னவென்றால் நடிகை குஷ்பூ மற்றும் நடிகர் பிரபு திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரு வருடம் வாழ்ந்து வந்தனர் என்றும் நடிகை குஷ்பு வேறு மதத்தைச் சார்ந்தவர் என்று ஒரே காரணத்திற்காக நடிகர் சிவாஜி இந்த திருமணத்திற்கு தடையாக இருந்தார் என்றும் கூறப்பட்டது.
அதன் பிறகு நடிகர் பிரபு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பது ஊர் அறிந்த தகவல். இந்நிலையில், வாரிசு திரைப்படத்தில் நடிகர் குஷ்பூவுக்கு நடிகர் பிரபுவுக்கு ஜோடியாக மீண்டும் குஷ்பூ நடித்திருந்தால் அது தேவையற்ற பேச்சுக்களை உருவாக்கி இருக்கும் என்பதால் கூட இந்த காட்சிகளை நீக்கி இருக்கலாம் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.