90களில் சக்கை போடு போட்ட நடிகைகளில் ஒருவர்தான் விசித்ரா [ Vichithra ] மிகச்சிறந்த நடிகையான இவர் கவர்ச்சியை கூடுதலாக காட்டியதன் மூலம் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக திகழ்ந்தார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார்.
ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடிய இவர் சிறந்த குண சித்திர நடிகையும் கூட மேலும் இவர் பல வில்லி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அன்றே கலக்கியவர் என்பதை நாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
இன்று இருக்கும் இளம் தலைமுறைக்கு விசித்ரா பற்றி தெரிந்திருக்க கூடிய வாய்ப்பு இல்லை. எனினும் நீங்கள் விதித்தராவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முத்து திரைப்படத்தில் செந்தில் மற்றும் வடிவேலுக்கு ஜோடியாக அசத்தல் கதாபாத்திரத்தை செய்திருப்பார். இதை போட்டுப் பார்த்தால் இவரது நேர்த்தியான நடிப்புத்திறன் உங்களுக்கு விளங்கும்.
அது மட்டுமல்லாமல் இவர் சேரன் பாண்டியன் உள்ளிட்ட படங்களில் சூப்பராக நடித்திருக்கிறார். அண்மையில் இவர் ஒரு யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஷகிலா உடன் மனம் திறந்து பேசி இருக்கிறார். மேலும் இவர் சென்னையை சேர்ந்தவர்.
இவர் அப்பா ஒரு சினிமா தயாரிப்பாளர் மற்றும் நடிகரும் கூட. பி ஏ சைக்காலஜி படிப்பை முடித்துவிட்டு கேரளாவில் ஒரு பட சூட்டிங் இருக்கும் போது தான் இவர் திருமணம் செய்து கொண்ட கணவரை சந்தித்து இருக்கிறார்.
திருமணத்துக்குப் பிறகு இவர் மைசூரில் ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் சில பேட்டி அடிக்க வந்த போது சினிமாவில் ரீ என்ட்ரி வாய்ப்பும் இவருக்கு தேடி வந்தது.
இவரும் மற்ற நடிகைகளை போடவே சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருக்கக்கூடியவர். இதனை அடுத்து அண்மையில் வெளியிட்டு இருக்கின்ற இவரது போட்டோவை பார்த்து அட இது நம்ம விசித்ரா வா என்று கேட்கத் தோன்றும் வகையில் உள்ளது.
இந்த புகைப்படத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக காட்சியை தந்திருப்பதை பார்த்து அனைவரும் வியந்து இருக்கிறார்கள்.
சினிமா திரையில் இவருக்கு உரிய அங்கீகாரம் என்னும் கிடைக்கவே இல்லை என்பது இன்னும் இவருக்கு மனதில் உள்ளது என்றுதான் கூற வேண்டும். அதைப் பல இடங்களிலும் பல பேட்டிகளிலும் இவர் தொடர்ந்து கூறி வருகிறார்.
மேலும் இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்திற்கு அதிகளவு லைக் மற்றும் கமெண்ட்கள் வந்துள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இவரது புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.