Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

உடலுறவை இளம் பெண்கள் என்ஜாய் பண்றது இல்ல.. இது தான் காரணம்.. நேர்கொண்ட பார்வை வித்யா பாலன் கருத்து..!

நடிகை வித்யா பாலன் ஆரம்ப காலங்களில் விளம்பர படங்களில் நடித்திருக்க கூடியவர். இவர் பாலிவுட் திரைப்படங்களில் ஆர்வம் காட்டி நடித்து வந்தார்.

அத்துடன் இவர் சமூகவியல் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர். அத்தோடு இசை காணொளிகள் மட்டுமல்லாமல் பல்வேறு வணிக ரீதியான விளம்பரங்களில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார்.

நடிகை வித்யா பாலன்..

கேரளாவில் இருக்கும் பாலக்காட்டில் பிறந்து வளர்ந்த இவர் தனது பள்ளி படிப்பை புனித அந்தோணி பள்ளியிலும் பட்டப்படிப்பை புனித சேவியர் கல்லூரியிலும் படித்து முடித்தவர்.

இதனை அடுத்து தனது முதுகலை படிப்பை மும்பையில் படிக்க சென்ற போது தான் திரைப்பட வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

அந்த வகையில் இவர் முதல் முதலாக மோகன்லாலோடு இணைந்து சக்கரம் என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

எனினும் இவரது துரதிஷ்டம் அந்த திரைப்படம் படப்பிடிப்பு நடப்பதற்கு முன்பே இவரை நீக்கியது. இதனை அடுத்து அந்த வேடத்தில் மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார்.

இது போலவே தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர் அந்த படத்திலும் நடிக்க முடியாமல் போனதை அடுத்து இவரது ரோலை திரிஷா கிருஷ்ணன் செய்திருந்தார்.

இதனால் தான் திரை வாய்ப்புகள் கிடைக்காது என்று மனக்கணக்கு போட்ட இவர் தொலைக்காட்சியை விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதனை அடுத்து நல்ல நல்ல வாய்ப்புகள் எவரை தேடி வந்த போதும் நடிக்காமல் இருந்த இவர் மணிரத்தினம் அவர்களால் சிறந்த விமர்சனம் செய்யப்பட்ட குரு திரைப்படத்தில் 2007 ஆம் ஆண்டு நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் பேசும் பொருளாய் பலர் மத்தியில் பாராட்டுதல்களை இவருக்கு பெற்று தந்தது.

இதனை அடுத்து கிடைத்த திரைப்பட வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடியவர்.

உடலுறவை இளம் பெண்கள் என்ஜாய் பண்ணுவது இல்லை..

சமூக வலைத்தளங்களில் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதோடு நின்று விடாமல் அடிக்கடி பேட்டிகளை கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் இளம் பெண்கள் உடலுறவு என்ஜாய் பண்ணுவதில்லை என்ற கருத்தை கூறி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

மேலும் இந்த சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை வித்யா பாலன் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு உடலுறவு என்றாலே ஒரு ரகசியமான விஷயமாகவும் ஒரு அருவருக்கத்தக்க விஷயம் என்ற கருத்து சிறு வயது முதல் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயிற்றுவிக்கப்படுகிறது.

சில பெண்களுக்கு உடலுறவு என்றாலே பயம் வரும் அளவுக்கு கூட இப்படியான கருத்துக்கள் அவருக்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால், ஆண்கள் அப்படி கிடையாது. இதன் காரணமாகத்தான் இயற்கையாகவே பெண்களுக்கு படுக்கை அறை விஷயங்களில் ஈடுபாடு குறைந்து விடுகிறது அல்லது பயம் வந்து விடுகிறது. 

காரணம் இதுதான்..

மேலும் சில சமயம் ஈடுபாடு இருக்கும் பெண்களுக்கு கூட இப்படியான கருத்துக்கள் காரணமாக ஒரு விதமான அச்ச உணர்வுக்கு ஆளாகிவிடுகிறார்கள். 

இதனால் தான் இளம்பெண்கள் படுக்கையறை விஷயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் முழுமையாக செயல்பட்டு என்ஜாய் செய்யவும் தயங்குகிறார்கள்.

 அத்துடன் படுக்கையறை விஷயங்களை கொண்டாடவும் மறுக்கிறார்கள். இதனால் கணவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல பெண்களுக்கு இது மீதான அச்ச உணர்வு தயக்கம் ஆகியவை குறைந்து ஒரு தெளிவான பார்வை கிடைக்கிறது.

அதன் பிறகு தங்கள் கணவருடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதனால் தான் 40 வயதை தாண்டிய பெண்கள் இப்படியான விஷயங்களை என்ஜாய் செய்ய பழகுகிறார்கள் என கூறியிருக்கிறார். 

இவருடைய இந்த கருத்து குறித்து உங்களுடைய பார்வை என்ன என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யலாம்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version