Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தொளதொள ட்ரவுசர்.. நிற்கும் கணவர் நெஞ்சில் குரங்கு போல எகிறி அமர்ந்த நயன்தாரா..! வைரலாகும் வீடியோ..!

சிம்பு மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் “போடா போடி”.

இந்த திரைப்படத்தை இயக்கி இயக்குனராக சினிமாவில் அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.இளம் இயக்குனராக முதன் படத்தில் ஏகோபித்த வரவேற்பு பெற்றார் .

விக்னேஷ் சிவனின் திரைப்பயணம்:

மிகச் சிறந்த கதை கொண்ட அந்த திரைப்படம் வித்தியாசமான கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தால் பெருவாரியான மக்களின் மனதை கவர்ந்தது.

இருந்தாலும் மிகப்பெரிய அளவில் வசூல் ரீதியாக அந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து தனது முயற்சி விடாமல் அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கி வந்தார்.

---- Advertisement ----

பின்னர் 2014 ஆம் ஆண்டு வெளியான “வேலையில்லா பட்டதாரி” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றுவிட்டு சென்றார்.

போடா போடி திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து “நானும் ரவுடிதான்” திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

ஷூட்டிங்கில் மலர்ந்த காதல்:

இத்திரைப்படத்தில் நயன்தாரா – விஜய் சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம் பின்னாலில் காதலாக மாறியது.

அவர்கள் இருவரும் ரகசியமாக அந்த சூட்டிங் ஸ்பாட்டிலே காதலித்து வந்தார்கள். கிட்டத்தட்ட 8 வருடங்களாக விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி காதலித்து வந்த நிலையில் அதன் பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணம் நடைபெற்ற ஒரு சில மாதங்களிலேயே நயன்தாரா வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார் .

விக்னேஷ் இவனை காதலிப்பதற்கு முன்னதாக நடிகை நயன்தாரா பிரபல நடன கலைஞரான பிரபுதேவாவை ரகசியமாக காதலித்து யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.

நயன்தாராவின் காதல் தோல்விகள்:

ரகசியமாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் பிரபுதேவாவின் மனைவிக்கு இது பிடிக்காததால் அவர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி நயன்தாராவை அசிங்கப்படுத்தினார்.

இதனால் நயன்தாரா பிரபுதேவாவை விட்டு பிரிந்து விட்டார். பின்னர் திரைப்படங்களில் கூட நடிக்காமல் மூளையிலே முடங்கிக் கிடந்த நயன்தாரா அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக திரையில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு சிம்புவுடன் காதல் வயப்பட்டு அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் , லிப்லாக் புகைப்படங்கள் உள்ளிட்டவை சுச்சி லீக்சில் வெளியாகி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

பின்னர் அவரையும் பிரேக்கப் செய்துவிட்டார். அதன் பிறகு தான் விக்னேஷ் இவனை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிறந்த நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்படும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தங்களுடைய சமூக வலைதளங்களில் வீடியோக்கள் புகைப்படங்கள் என எது வெளியாட்டாலும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிவிடும்.

விக்கி மீது குரங்கு போல் ஏறிய நயன்:

திரைப்படங்களில் நடித்துவிட்டு கிடைக்கும் கேப்பில் அவர்கள் இருவரும் ஜாலியாக ட்ரிப் சென்று வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாரா எகிறி குதித்து விக்னேஷ் சிவனின் நெஞ்சில் குரங்கு போல் அமரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது .

ஜாலியாக எடுத்துக் கொண்ட இந்த வீடியோ ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படியே மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழுங்கள் என அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள் .

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நயன்தாரா கைவசம் தற்போது தற்போது தனி ஒருவன் 2 , கவின் உடன் ஒரு புதிய படம் உள்ளிட்டவற்றை கைவசம் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top