தமிழ் சினிமா இயக்குநர்களில், பெயர் பெற்றவர் வெற்றிமாறன். இன்று சூரி கதாநாயகனாக நடித்த, விடுதலை படம் பரபரப்பாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. நிச்சயம் இது வெற்றிப்படம்தான் என, பிரிவியூ ஷோ பார்த்தவர்கள் உறுதியாக கூறி இருக்கின்றனர். படத்தை பார்த்த இளையராஜா, சூரியின் நடிப்பை பிரமாதம் என பாராட்டி இருக்கிறார்.
ஆடுகளம் படத்தின் போதே, வெற்றிமாறன் மற்றவர்களை போல அல்ல, வித்யாசமான இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார். சேவல் சண்டையை மையப்படுத்தி, அதில் தனுஷ் நடிப்பை அமர்க்களப்படுத்தி இருப்பார். அடுத்து, அசுரன் படத்திலும், தனுஷூக்கு நல்ல நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பை தந்தார். விசாரணை படமும், வெற்றிமாறனின் திறமையை வெளிச்சமிட்டு காட்டிய படம்.
வெற்றி மாறனை போன்ற யதார்த்தமான படைப்பாளியின் படத்தில் நடிக்க நடிப்பாற்றல் மிக்க அனைத்து நடிகர்களுக்கும் அதிக விருப்பம் காணப்படுகிறது.
விடுதலை பாகம் 1 ரிலீஸ் ஆன நிலையில், விடுதலை பாகம் 2ஐ முடித்து விட்டு, கமல் அல்லது விஜய் வைத்து வெற்றிமாறன் படம் இயக்கப் போவதாக தகவல்கள் பரவி வருகிறது.
கமல் தற்போது இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். லியோ படத்தில், நடித்து வருகிறார் விஜய். இந்த படங்களை முடித்த பிறகு, அவர்கள் அடுத்த படங்களில் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில், வெற்றிமாறனின் உதவி இயக்குநர்களில் ஒருவரும், டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ், இதுகுறித்த கேள்விக்கு பளிச் சென பதில் அளித்திருக்கிறார்.
இவர், ஜெய்பீம் படத்தில், லாக்கப்பில் மணிகண்டனை நெஞ்சில் மிதித்தே கொல்லும் கொடூரமான இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்திருந்தாரே அவர்தான், தமிழ்.
அவர் அளித்த பேட்டியில், வெற்றிமாறன் படத்தில், விஜய் நடிப்பது உறுதியான ஒன்றுதான். கமலுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது, என தெரிவித்துள்ளார்.
ஆனால், வெற்றிமாறன் யதார்த்த படைப்பாளி. விஜய் பில்டப் காட்டும் ‘மாஸ்’ ஹீரோ என்பதால், இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு, இப்போதே ரசிகர்களிடம் ஏற்பட்டு விட்டது.