பொன்னியின் செல்வன் பகுதி இரண்டு வெளிவந்த பிறகு நடிகரான சீயான் விக்ரம் ( Vikram ) ரசிகர்களின் மனதில் அசைக்க முடியாத இடத்தை பிடித்து விட்டார் என்று தான் கூற வேண்டும். ஆதித்ய கரிகாலராக இந்த படத்தில் அனைவரது மனதையும் ஆட்சி செய்யக்கூடிய வகையில் இவர் நடித்திருந்தார்.
இதனை அடுத்து இவர் பா ரஞ்சித் இயக்கி வரும் தங்கலான் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆரம்ப நாட்களில் இருந்தே நடிகர் விக்ரம் ஒவ்வொரு படத்திற்காகவும் தன்னை அந்த கதாபாத்திரத்துக்காக செதுக்கி நடிக்க கூடியவர்.
அந்த வகையில் தற்போது கோலார் தங்கவயலை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்தப் படத்தில் இவருடன் பார்வதி’ மாளவிகா மோகன் ,பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வருகிறார்.மேலும் படத்திற்கான இசையை ஜிவி பிரகாஷ் அமைத்திருக்கிறார்.
இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் நிறைவடைந்த உள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திரைப்படம் வெளிவரும் என்பது தெரியவந்துள்ளது.
அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் சீயான் விக்ரம் அவசரம் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இதனை அடுத்து ஆழ்ந்த கவலையில் இருக்கக்கூடிய ரசிகர்கள் என்ன நடந்தது என்பதை பற்றி பேசுகையில் தான் தெரிந்தது படப்பிடிப்பின் போது விபத்து நடந்து உள்ளதாகவும் அதனை அடுத்து சீயான் விக்ரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தப் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சீயான் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு விலா எலும்பு முறிந்துள்ளதால் சிறிது காலம் இந்த படப்பிடிப்பு நிறுத்தப்படும். அவர் விரைவில் குணமடைந்து திரும்பிய பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று உறுதியோடு அனைவரும் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்தப் பதிவினை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பதறி வருவதோடு விரைவில் சியான் விக்ரம் உடல் நலம் தேடி மீண்டும் இந்த படத்தில் நடிக்க கூடிய வலிமையை கடவுள் அளிக்க வேண்டும் என்று வேண்டி வருகிறார்கள்.
எனவே விரைவில் சியான் விக்ரம் உடல் நலம் தேறி எந்த திரைப்படத்திலும் நடித்து பெருவாரியான மக்களின் நற்பெயரை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.