VJ ரம்யா : பொதுவாகவே நல்ல அறிவும், அழகும் இருக்கும் பெண்களுக்கு திருமண வாழ்க்கை சரியாக வாய்ப்பு இல்லை. அந்த வரிசையில் விஜே ரம்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருக்கும் இவரை பற்றிய அதிக அறிமுகம் தேவையில்லை.
ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்திருக்கும் விஜி ரம்யாவுக்கு தமிழகத்தை பொறுத்தவரை அதிகளவு ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் இந்தியாவிலும் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.இவர் 2004 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றவர்.
ஆரம்ப நாட்களில் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தபோது இவருக்கு தொகுப்பாளனியாக பணியாற்றக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் விஜய் டிவியில் இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதத்தால் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
இதனை அடுத்து இவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் , கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அற்புதமாக தொகுத்து வழங்கி இருக்கிறார்.
இவர் அப்ரஜித் என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரது கணவர் இவர் மீடியாவில் இருப்பது பிடிக்காமல் கிசுகிசுக்களை உண்மை என நம்பி ரம்யாவை விவாகரத்து செய்து விட்டார். அடுத்து தனது கேரியரில் கண்ணும் கருத்துமாக கவனம் செலுத்த ஆரம்பித்த இவர் தற்போது முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் இவர் தந்த பேட்டி ஒன்றில் தனது விவாகரத்து குறித்து ஓப்பனாக பேசியிருக்கிறார். ஆறு வருடத்திற்கு முன்பு என் வாழ்க்கையில் இருள் சூழ்ந்தது. என்னை தவறுகளாக பேசியவர்களை உண்மை என்று நம்பி பைத்தியம் பிடித்தவள் போல் என்னை மாற்றி விட்டார்கள்.
இதிலிருந்து முழுமையாக நான் வெளியில் வர எனக்கு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் பிடித்தது. பல விதமான மன உளைச்சலுக்கு உட்படுத்தப்பட்ட நான் விவாகரத்துக்குப் பின்பு தான் மன அமைதியோடும் நல்ல முறையில் பணிபுரியக்கூடிய சூழலும் எனக்கு அமைந்துள்ளது என்பதை வெட்ட வெளிச்சமாக தெரிவித்திருக்கிறார்.
இதனைக் கேட்டு இவ்வளவு நல்ல நிலையில் இருக்கும் பெண்ணுக்கு இப்படிப்பட்ட ஒரு நிலை என்றால் இன்னும் பெண்ணியம் வளரவில்லை என்று எண்ணும் படி தான் உள்ளது.