மல்லிப்பூ : நடிகர் STR நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
திரைக்கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் படம் வேற லெவல் வந்திருக்கும் இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை படம் தரமாக இருக்கிறது என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்த படத்தில் இடம்பெற்ற “மல்லி பூ வச்சி வச்சி வாடுது” என்ற ஒரு பாடல் இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே வெளியானது. ஆனால், இந்த திரைப்படம் வெளியான பின்பு இந்த பாடலுக்கான மவுசு திடீரென கூடியிருக்கிறது.
காரணம் கதையோடு ஒட்டி வந்த இந்த பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறது என்பதுதான். பிழைப்புக்காக குடும்பம், குழந்தைகளை பிரிந்து வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்த்து வரும் நபர்களின் வேதனையை பதிவு செய்யும் விதமான வரிகளுடன் இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பிரபல பாடகி மதுஸ்ரீ இந்த பாடலுக்கு தன்னுடைய குரலால் உயிரூட்டி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவுக்கு உயிரோட்டத்துடன் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த பாடல் திடீரென தற்பொழுது டிரெண்ட் ஆகி வருகின்றது. மட்டுமில்லாமல் இந்த பாடல் குறித்த மீம்களும் இணையத்தில் வைரலாகி இந்த பாலத்தில் ப்ரமோஷன் ஆக அமைந்து வருகிறது.
இந்த பாடல் படம் வெளியாகும் வரை வெறும் 5 லட்சம் பார்வையாளர்களை மட்டுமே பெற்றது. ஆனால் இந்தப் படம் வெளியான மூன்று நாட்களில் 20 லட்சத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் கூடுதலாக இந்த பாடலை பார்த்து 27 லட்சம் பார்வையாளர்களுடன் இருக்கிறது.
இந்த பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். மேலும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மெலடி பாடல்கள் மூலமே ரசிகர்களை Vibe ஆக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார் என்று ஆர் ரகுமானுக்கு பாராட்டுகளையும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.