Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

கமல் என்ன செய்ததால் மகளுடன் பிரிந்து சென்றார் கௌதமி.. குண்டை தூக்கி போட்ட பிரபலம்..!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகை கௌதமி. இவர் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

தமிழ் ,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக கௌதமி தென்பட்டு வந்தார்.

நடிகை கௌதமி:

மிகக்குறுகிய எண்ணக்கையிலான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதில் மிகக் கச்சிதமான தன் நடிப்பை வெளிப்படுத்தி அழுத்தமான ரோல்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இவர் நடிகை என்பதையும் தாண்டி தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, மற்றும் தொலைக்காட்சி நடுவர் இப்படி பல. துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

---- Advertisement ----

ரிக்ஷா மாமா, பணக்காரன், குரு சிஷ்யன், அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, ராஜா கைய வச்சா, தேவர்மகன், நம்மவர் உள்ளிட்ட படங்களில் இவர் தரித்திருக்கிறார் .

வெற்றித்திரைப்படங்கள்:

இதனிடையே தேவர் மகன் நம்மவர் உள்ளிட்ட படங்களில் கமல்ஹாசன் உடன் சேர்ந்து நடித்த போது அவருடன் நெருக்கம் ஏற்பட்டு பின்னாளில் அது காதலாக மாறியது.

பின்னர் இருவரும் சேர்ந்து லிவிங் லைப் வாழ தொடங்கினார்கள். பல ஆண்டுகளாக கௌதமி திருமணம் செய்யாமலே கமல்ஹாசனிடம் வாழ்ந்து வந்தார்.

அவரது மகளுடன் தான் வாழ்ந்து வந்தார். முன்னதாக கௌதமி சந்தீப் பாட்டியா என்பவரை 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஒரு வருடத்திலேயே அவர் தனது கணவரை பிரிந்து மகளோடு தனித்து வாழ்ந்து வந்த நிலையில் கமல்ஹாசன் உடன் நெருக்கம் ஏற்பட்டு அவருடன் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ தொடங்கினார்.

கமலுக்கு அந்த வேலை செய்துவந்த கௌதமி:

அவ்வப்போது கமலுக்கு ஆடை வடிவமைப்பாளராக பல படங்களில் கௌதமி பணியாற்றியும் இருக்கிறார்.
தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு ,ராமராஜன் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் கௌதமி.

தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வெற்றி நாயகியாக அங்கும் புகழ் பெற்றிருக்கிறார். 80ஸ் மட்டும் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வழக்கு வந்த கௌதமிக்கு “குருசிஷ்யன்” திரைப்படம் தான் முதல் திரைப்படம்.

தமிழை தாண்டி இவர் தெலுங்கு மற்றும் கன்னடம் மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பரவலாக நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் கௌதமியை மிகுந்த அக்கறையோடு கவனித்து வந்த கமல்ஹாசன். பின்னர் அவரது நடத்தை சரி இல்லை எனக் கூறி கௌதமி தனது மகளுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறியும் அவரை விட்டு பிரிந்து விட்டார்.

கௌதமி சொன்ன காரணம் பெரும் பூதாகரத்தை ஏற்படுத்தியது. கமல்ஹாசன் கௌதமியின் மகள் மீது அப்படி என்ன நடந்து கொண்டிருப்பார் என ஒரு கேள்வியும் அச்சமும் எழுந்தது.

கமல் ஹாசனை பிரிய காரணம் இதுதான்:

இந்நிலையில் தற்போது அதற்கான விளக்கம் ஒன்றை கௌதமி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் அதாவது, ஒரு ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் இருக்கும் போது அது வொர்க் அவுட் ஆகவே இல்லை அப்படின்னா அதோட எல்லா பொறுப்பையும் நீங்களே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.

இருவருக்கும் இடையே அன்பு அர்ப்பணிப்பு உள்ளிட்டவை சரிசமமாக இருக்க வேண்டும் அது அப்போதுதான் நீண்ட காலம் வரை நீடிக்கும்.

எந்தவிதமான ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் அதற்கு ஒரு மைய புள்ளி இருக்க வேண்டும் . இரண்டு பேரும் அந்த மையப் புள்ளியை கிட்டத்தட்ட 50 சதவீதம் தாண்டக்கூடாது.

இதுதான் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடமாக நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என கௌதமி அந்த பேட்டியில் கூறினார்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top