ஒரே படத்தில் தெறித்து ஓடிய நடிகை “விருமாண்டி” அபிராமி..! – இது தான் சமாச்சாரமாம்..!

அபிராமி,(Abhirami) ஒரு நல்ல நடிகையாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். தமிழ் சினிமாவில், சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் வானவில், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், விருமாண்டி, மாறா, நித்தம் ஒரு வானம் என சொறப எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே அபிராமி நடித்தார்.

ஆனால் சரத்குமார், அர்ஜூன், கமல்ஹாசன், பிரபு என முன்னணி நடிகர்களுடன் நடித்ததால், மிக விரைவிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல பப்ளிசிட்டி கிடைத்தது.

அபிராமி
Abhirami

அபிராமியின் பூர்வீகம் கேரள மாநிலம், திருவனந்தபுரம். இவரது இயற்பெயர் திவ்யா, சினிமாவுக்காக அபிராமி என மாற்றிக்கொண்டார். நடிக்க வருவதற்கு முன், டிவி தொகுப்பாளினியாக பணி செய்திருக்கிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.ஆனால், நல்ல நிலையில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த அபிராமி, திடீரென திருமணம் செய்துகொண்டு, வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இது, ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. எனினும் மீண்டும் அவர் நடிக்க, சினிமா துறைக்கு வந்திருக்கிறார்.

அபிராமி
Abhirami

தமிழ் சினிமாவில் நல்ல படங்களில், நல்ல கேரக்டர்களில் நடித்துக்கொண்டு இருந்தவர், திடீரென திருமணம் செய்துகொண்டது ஏன், அதுவும் சினிமாவில் நடிப்பதே பிடிக்கவில்லை என்று அவர் கூறியதாகவும், நடிகர் பயில்வான் ரங்கநாதன் இப்போது, புதியதாக ஒரு விவகாரத்தை கொளுத்தி போட்டிருக்கிறார். அது, இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, 2004ம் ஆண்டில் வெளியான விருமாண்டி படத்தில், கமலுக்கு ஜோடியாக அபிராமி, அன்னலட்சுமி கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில், கமலுடன் பல காட்சிகளில் அபிராமி மிக நெருக்கமாக நடித்திருந்தார்.

குறிப்பாக, உன்னை விட இந்த உலகத்துல உசந்தது ஒண்ணும் இல்ல, என்ற பாடல் காட்சியில் கமலுக்கும் – அபிராமிக்கும் நன்றாக கெமிஸ்டரி ஒர்க் அவுட் ஆனதாகவும், பயில்வான் ரங்கநாதன் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்.

Virumandi Abhirami
Virumandi Abhirami

கமலுடன் மிக இணக்கமாக, நெருங்கி நடித்த நிலையில்தான், அபிராமி சினிமாவே இனி வேண்டாம் என, நடிப்புக்கு டாடா சொல்லிவிட்டு திருமணம் செய்துகொண்டதாக, பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.

ஆனால், இப்போது மீண்டும் தமிழ் சினிமாவுக்கு அபிராமி திரும்ப வந்திருக்கிறார் என்ற தகவலையும் இந்த வீடியோவில் பதிவு செய்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கும் அபிராமி நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அபிராமி, மீண்டும் தமிழ் சினிமாவில் நல்ல கேரக்டர்களில் நடிக்கும் விருப்பத்தில் இருக்கிறேன். இந்த நடிகர், அந்த நடிகர் என குறிப்பிட்ட நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற தனிப்பட்ட விருப்பம் இல்லை. எல்லா நடிகர்களுடனும் நடிக்க வேண்டும், இதில் பாரபட்சம் என்பதே எனக்கு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

Virumandi Abhirami
Virumandi Abhirami

அபிராமி, நல்ல நடிகை என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே நடித்த சில படங்களிலேயே நிரூபித்து இருக்கிறார். ஆனால், 40 வயதுகளை கடந்த நிலையில், இப்போது தமிழ் சினிமாவுக்குள் வரும் அபிராமிக்கு, கதாநாயகி வாய்ப்பு என்பது இல்லை.

அம்மா, அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்கலாம். அல்லது வக்கீல், நீதிபதி, போலீஸ் அதிகாரி, டாக்டர் போன்ற ரோல்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கலாம். என்றாலும், கிடைக்கும் கேரக்டர்களில் நல்ல முறையில் நடித்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்வார் என்றே தோன்றுகிறது.

Virumandi Abhirami
Virumandi Abhirami

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …