இளம் நடிகரிடம் மயங்கிய நடிகை.. திருமணம் ஆனது பற்றி எல்லாம் கவலையே இல்லையாம்.!

இளம் நடிகரிடம் மயங்கிய நடிகை.. திருமணம் ஆனது பற்றி எல்லாம் கவலையே இல்லையாம்.!

சினிமாத்துறையை பொருத்தவரை, அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்வது போல, ஆண் பெண் உறவு என்பது, எல்லை மீறியதாக எப்போது வேண்டுமானாலும் மாறி விடுகிறது.

திருமணமானவர், திருமணம் ஆகாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது.

டீவி நடிகரிடம் மயக்கம்..

அந்த நடிகர் டீவியில் பல சீரியல்களில் நடித்தவர். சினிமாவில் நடிப்பதுதான் அவரது லட்சியம். அதனால் சீரியலில் நடித்து நடித்து பிரபலமாகி, கடைசியில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுவிட்டார்.

அப்படி சினிமாவில் நடித்த போது, அந்த படத்தில் நடித்த நாயகியுடன் அவர் நெருக்கமாக நடித்துள்ளார்.

முத்தக்காட்சியிலும் நடித்த நிலையில் ஹீரோயினுக்கு டீவி நடிகரிடம் காதல் மயக்கம் ஏற்பட்டது.

ஆனால், டீவி நடிகராக இருந்த போது, அவருக்கு மனைவிதான் மிக ஆதரவாக இருந்தவர். சினிமாவில் சாதிக்க ஆசைப்படும் கணவருக்காக, தன் நகைகளை எல்லாம் கொடுத்து கணவரின் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறார்.

இளம் சிட்டு..

ஆனால் படப்பிடிப்பில் இளம் சிட்டு போன்ற அழகான இளம் ஹீரோயினுடன் நெருங்கி நடித்த நட்பில், ஹீரோவுக்கும் நாளடைவில் ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் இரவு நேரங்களில் பார்ட்டி, பப்பே என வெளியில் சுற்ற ஆரம்பித்தனர். நெருக்கமாகவும் பழகினர்.

சீரியலில் நடித்த போது மற்ற நடிகைகளை கண்டுக்கொள்ளாத தன் கணவர் மீது மனைவிக்கு ஏகப்பட்ட நம்பிக்கை இருந்தது.

ஆனால், வீட்டில் இருக்கும் போதும் போனில் மணிக்கணக்கில் கணவர் தினமும் பேசுவது, மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதன்பிறகு உண்மையை அறிந்த அவருக்கு பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த சூழலில், அந்த நடிகையுடன் அந்த ஹீரோ ரகசியமாக தனிக்குடித்தனமே நடத்திக்கொண்டு இருந்துள்ளார்.

இதுவும் அவரது மனைவி காதுகளுக்கு வந்தது.

இதையடுத்து நேராக அந்த நடிகையை சந்தித்த நடிகரின் மனைவி, எனக்கும் அவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிறது என்று சொல்ல, அதெல்லாம் தெரிந்துதான் பழகுகிறேன்.

எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு. அவருடன் தான் வாழ்வேன். உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ, எனக்கு கவலையில்லை என்று அலட்சியமாக கூறியிருக்கிறார்.

இந்த விஷயத்தை கணவரிடம் எப்படி கேட்பது, கேட்டால் தன்னைவிட்டு பிரிந்து சென்று விடுவாரோ என்ற அச்சத்தில் அந்த நடிகரின் மனைவி தவித்துக்கொண்டு இருக்கிறார்.
இளம் நடிகரிடம் மயங்கிய அந்த நடிகை, அவருக்கு திருமணம் ஆனது பற்றிய கவலையே இல்லாமல், அவருடன் சேர்ந்து வாழ்வதில் குறியாக இருக்கிறார்.