விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி இரண்டாம் சீசன் சேற்றில் மூலமாக பாப்புலர் ஆனவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி. அந்த தொடர் மிகப்பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து அடுத்த சீசனிலும் அவர் தான் ஹீரோயினாக நடித்தார்.
அதன் பின் ஒரு இடைவெளி விட்டு தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாம் சீசனில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே ரச்சிதா நாம் இருவர் 2 தொடரில் இருந்து வெளியேறுகிறார் என தகவல் பரவி வந்தது.
அவர் கன்னட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிப்பதால் தான் அந்த செய்தி பரவியது. மேலும் சீரியலில் ரச்சிதா நடித்து வந்த மஹா ரோலுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவிட்டது. செந்தில் டபுள் ரோலில் நடிக்க தொடங்கியபிறகு மஹா ரோலுக்கு அதிகம் காட்சிகள் இல்லை.
அது ஏன் என ரசிகர்கள் கேட்க, அந்த கேள்வியை இயக்குனரிடம் சென்று கேளுங்கள் என கோபமாக கூறி இருக்கிறார்.ரச்சிதாவின் ரோல் மெயின் ரோலாக இருந்த காலம் போய் தற்போது ஓரமாக ஒட்டிக்கொண்டிருக்கும் ரோலாக மாற்றப்பட்டு விட்டது.
அது அவரது ரசிகர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் தற்போது ரச்சிதா நாம் இருவர் சீரியலுக்கு குட்பை சொல்லி இருக்கிறார். அவர் இன்ஸ்டாகிராமில் 'பை மஹா' என குறிப்பிட்டு அதன் பிறகு சில எமோஜிகளை பதிவிட்டு உள்ளார்.
அதனால் அவர் சிரியலை விட்டு வெளியேறியது உறுதி ஆகிறது. அடிக்கடி இணையத்தில் தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் ரச்சிதா மகாலக்ஷ்மி தற்போது மூக்கு கண்ணாடி அணிந்த படி சில புகைப்படங்களை வெளியிட.. ஒரு நிமிஷம் மியா கலிஃபா-ன்னு நெனசிட்டோம் என கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
0 கருத்துகள்