சமீப காலமாக திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்வது ஒரு பக்கம் இருக்க ஏற்கனவே திருமணம் செய்து குடும்பம் குழந்தை என வாழ்ந்து கொண்டிருக்கும் தொழிலதிபர்களின் குடும்பத்தில் புகுந்து இந்த குடும்பத்தை நாசம் செய்யும் வேலைகளை சில நடிகைகள் பார்த்திருக்கிறார்கள்.
அந்த வகையில், பொசு பொசு நடிகை பற்றி நாம் பலமுறை பார்த்து விட்டோம். அந்த வகையில், நைனா நடிகைசமீபத்தில் சிக்கி இருக்கிறார்.
படம் தயாரிப்பு படப்பிடிப்பு.. தளம் தேர்வு செய்வது.. போன்ற உதவிகளால் பிரபல தொழிலதிபருக்கு நெருக்கமான அந்த நைனா நடிகை அவருடைய குடும்ப நண்பர்களில் ஒருவராகும் அளவுக்கு அவருடன் பழகி இருக்கிறார்.
நல்ல நடிகையாக இருக்கிறாரே என வீடு வரை அனுமதித்திருக்கிறார் அந்த தயாரிப்பாளரின் மனைவி. ஒரு கட்டத்தில் தயாரிப்பாளரின் மனைவியும் நைனா நடிகையும் நெருக்கமான தோழிகளாகவும் மாறி இருக்கிறார்கள்.
ஆனால், நைனா நடிகை தனக்கு சக்காளத்தி ஆக வருவாள் என்று அவருடைய தோழி ஒரு நாளும் நினைத்திருக்க மாட்டார். திடீரென தன்னுடைய மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் கொடுத்து அதிர வைத்திருக்கிறார் அந்த தயாரிப்பாளர்.
என்ன காரணம்..? எதற்காக விவாகரத்து..? என்று விசாரிக்க தொடங்கிய தோழிக்கு.. அப்போதுதான் உண்மையோ தெரிய வந்திருக்கிறது.
நைனா நடிகை தன்னுடைய கணவரை மயக்கி விட்டார் என்று.. இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்கள்.. மட்டுமில்லாமல் காதலின் அடையாளமாக மோதிரம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.. போன்ற விஷயம் எல்லாம் தெரிந்த அந்த தோழி மீடியா முன்பு நேரடியாக வந்து என்னுடைய கணவரை அபகரித்து விட்டார் இந்த நடிகை என்று நைனா நடிகையின் மானத்தை தெருவில் இழுத்து விட்டார்.
இதனால் நைனா நடிகை மீது ரசிகர்களுக்கு இருந்த பிம்பம் சுக்கு சுக்காக உடைந்து போனது. இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்த நைனா நடிகை எப்படியாவது தோழியின் கணவரை திருமணம் செய்து விடலாம் என்ற முயற்சியில் இருக்கிறார்.
ஆனால், இந்த திருமணம் செய்தால் ஒரு குடும்பத்தையே கெடுத்த பாவம் நமக்கு வந்துவிடும் என்று நைனா நடிகையின் வீட்டில் இருந்தவர்கள் சொல்லவே தன்னுடைய காதலில் இருந்து பின்வாங்கி திருமணத்தை மறுத்திருக்கிறார் நைனா நடிகை.
தற்போது தயாரிப்பாளர் தன்னுடைய மனைவியிடமே தஞ்சம் புகுந்திருக்கிறாராம். இப்படி நன்றாக இருக்கும் குடும்பத்தில் உள்ளே புகுந்து கும்மி அடிக்கும் இந்த நைனா போன்ற நடிகைகளை என்ன சொல்லி திட்டுவது என நீங்களே சொல்லுங்கள்.
0 கருத்துகள்