நடிகர் விஜய்யின் 'ஃபிரண்ட்ஸ்' திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகவும், விஜய்க்கு தங்கையாகவும் நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி.
இவருக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் இடையே நிலவும் பிரச்சனை ஊரறிந்த ரகசியம்.
இந்நிலையில், சமீபத்தில் பிரபல செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியினருக்கும், சீமானுக்கு ஆதரவாளர்களுக்கும் எதிராக ஆவேசமாக பேசியுள்ளார்.
அவரது காட்டமான பேச்சு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியினரும் சீமானுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும், தனக்கு ஆதரவாக பேசும் செய்தியாளர்களையும், தன்னை ஆதரிக்கும் வீரலட்சுமி போன்றோரையும் தரக்குறைவாக விமர்சிப்பதாக விஜயலட்சுமி வேதனை தெரிவித்தார்.
குறிப்பாக, தனக்கு ஆதரவாக பேசுபவர்களை "நீங்கள் தான் விளக்கு பிடிச்சீங்களா?" என்று கேட்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆவேசமாக பேசிய விஜயலட்சுமி, நடிகை கஸ்தூரியை உதாரணம் காட்டி காட்டமாக விமர்சித்தார்.
சமீப காலமாக நடிகை கஸ்தூரி சீமானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், விஜயலட்சுமி, "இப்போது நடிகை கஸ்தூரி சீமானுக்கு ஆதரவாக பேசி வருகிறார். அப்படியென்றால் நானும் சீமானும் படுத்தபோது விளக்கு பிடிச்சது கஸ்தூரி தான் என்று நான் சொல்லவா?" என்று வெடித்தார்.
விஜயலட்சுமியின் இந்த காட்டமான பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. விஜயலட்சுமிக்கும் சீமானுக்கும் இடையேயான பிரச்சனை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இருவரும் மாறி மாறி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் விஜயலட்சுமி தற்போது கஸ்தூரியின் பெயரை இழுத்து பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. சீமானுக்கு ஆதரவாக கஸ்தூரி பேசுவதை விமர்சிக்கும் விதமாக விஜயலட்சுமி இவ்வாறு பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜயலட்சுமியின் இந்த பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் சீமான் ஆதரவாளர்கள் எப்படி எதிர்வினையாற்ற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இருப்பினும், விஜயலட்சுமிக்கும் சீமானுக்கும் இடையேயான மோதல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது என்றும், இந்த விவகாரம் மேலும் சூடு பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்