நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "குட் பேட் அக்லி". "விடாமுயற்சி" திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
குறிப்பாக, அஜித்தின் தீவிர ரசிகரான ஆதித் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்குவதால், இது ஒரு "Fan Boy" சம்பவமாக இருக்கும் என்று படத்தின் டீசரே உணர்த்தியது. சமீபத்தில் வெளியான படத்தின் முதல் பாடலும் ரசிகர்களிடையே வெறித்தனமான வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். "விடாமுயற்சி" படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் மற்றும் த்ரிஷா கூட்டணி இணைந்துள்ளது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
வருகிற ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், தற்போது "குட் பேட் அக்லி" படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது. பொதுவாக, திரைப்படங்களை வெளியிடுவதற்கு முன்பு அதன் வியாபாரத்தை உறுதி செய்வதற்காக படத்தின் ஒரு பகுதியை திரையுலகில் உள்ள முக்கிய நபர்களுக்கு திரையிட்டு காட்டுவது வழக்கம்.
அதேபோல், "குட் பேட் அக்லி" படத்தின் முதல் 20 முதல் 30 நிமிட காட்சிகளை படக்குழுவினர் திரையிட்டு காட்டியுள்ளனர். படத்தை பார்த்த முக்கிய நபர்கள் அனைவரும் மிரண்டு போனதாகவும், படம் மிகவும் தரமாக வந்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும், படத்தின் பிஸினஸும் மிக வேகமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தை பார்த்தவர்களின் இந்த அதிரடியான விமர்சனம், ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.
முதல் விமர்சனமே இவ்வளவு பாசிட்டிவாக வந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏப்ரல் 10ம் தேதிக்காக அவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.